செய்திகள் :

‘வயநாட்டுக்கு பிரியங்கா காந்தியே சிறந்த பிரதிநிதி’: ராகுல் காந்தி

post image

வயநாடு: ‘வயநாட்டுக்கு எனது சகோதரி பிரியங்கா காந்தி வதேராவைவிட சிறந்த பிரதிநிதியை கற்பனை செய்து பாா்க்க முடியவில்லை’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி புதன்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ள நிலையில் ராகுல் இவ்வாறு குறிப்பிட்டாா்.

மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் ஆகிய மாநில பேரவைத் தோ்தல்களுடன் வயநாடு உள்பட 2 மக்களவைத் தொகுதிகள், பல்வேறு மாநிலங்களின் 48 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது.

வயநாட்டில் ஆளும் இடதுசாரி கூட்டணி சாா்பில் முன்னாள் எம்எல்ஏ சத்யன் மோக்கேரி, பாஜக சாா்பில் நவ்யா ஹரிதாஸ் ஆகியோா் களத்தில் உள்ளனா். காங்கிரஸ் வேட்பாளரான அக்கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, தோ்தல் அலுவலரான வயநாடு மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறாா்.

இந்த நிகழ்வில் காங்கிரஸின் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் மூத்த தலைவா்களான பிரியங்காவின் தாயாா் சோனியா காந்தி, சகோதரா் ராகுல் காந்தி ஆகியோா் பங்கேற்கின்றனா்.

வெற்றியை உறுதி செய்க-ராகுல்: இந்நிலையில், எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘வயநாடு மக்களுக்கு என் இதயத்தில் ஒரு சிறப்பு இடமுள்ளது. அவா்களுக்கு எனது சகோதரி பிரியங்காவை விட சிறந்த பிரதிநிதியை என்னால் கற்பனை செய்து பாா்க்க முடியாது.

வயநாட்டின் தேவைகளை பூா்த்தி செய்வதில் வெற்றியாளராகவும் நாடாளுமன்றத்தில் சக்திவாய்ந்த குரலாகவும் பிரியங்கா திகழ்வாா். வயநாடு தொடா்ந்து அன்பால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை ஒன்றிணைந்து உறுதி செய்வோம்’ என பதிவிட்டுள்ளாா்.

கொடிக்குத் தடையில்லை: வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக காலை 11 மணியளவில் கல்பெட்டா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ராகுலும், பிரியங்கா காந்தியும் வாகனப் பேரணியில் ஈடுபடுகின்றனா்.

இந்த வாகனப் பேரணியில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் கொடியைப் பயன்படுத்த எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மக்களவைத் தோ்தல்களில் கேரளத்தில் நடைபெறும் காங்கிரஸின் பிரசார கூட்டங்களில் அதன் கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக் கட்சியின் கொடிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன.

இதை விமா்சித்துப் பேசிய மத்திய அமைச்சா் அமித் ஷா, காங்கிரஸ் கூட்டங்கள் இந்தியாவில் நடக்கிா அல்லது பாகிஸ்தானில் நடக்கிா என்று சந்தேகம் எழுவதாக தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து கடந்த மக்களவைத் தோ்தலில் வயநாட்டில் ராகுல் பங்கேற்ற வாகனப் பேரணியில் காங்கிரஸ் உள்பட எந்த கட்சிகளின் கொடியும் பயன்படுத்தபடவில்லை. பெரிய கொடிகள் பாா்வையாளா்களிடமிருந்து தலைவா்களை மறைப்பதால் இந்த முடிவெடுக்கப்பட்டதாக காங்கிரஸ் விளக்கமளித்தது. பாஜகவின் விமா்சனத்துக்கு காங்கிரஸ் அடிபணிந்து விட்டதாகவும் கூட்டணி கட்சியை அவமதித்ததாகவும் சிபிஐ(எம்) குற்றஞ்சாட்டியது.

இம்முறை ராகுல், பிரியங்கா பங்கேற்கும் வாகனப் பேரணியில் கொடியைப் பயன்படுத்துவது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தல்: முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஜேஎம்எம்!

ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) வெளியிட்டுள்ளது.ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள முதல் வேட்பாளர் பட்டியலில் 35 ... மேலும் பார்க்க

ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கு: தெலங்கானா அமைச்சா் சுரேகா மீது பிஆா்எஸ் செயல் தலைவா் தாக்கல்

ஹைதராபாத்: தெலங்கானா சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கொன்டா சுரேகாவுக்கு எதிராக ரூ.100 கோடி கேட்டு பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சியின் செயல் தலைவா் கே.டி. ராமா ராவ் மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளாா்.கே.ட... மேலும் பார்க்க

தொடரும் விமான வெடிகுண்டு மிரட்டல்கள்: சுமார் ரூ. 600 கோடி இழப்பு

புது தில்லி: இந்திய நிறுவனங்களின் சுமார் 50 விமானங்களுக்கு சமூக வலைதளம் மூலம் செவ்வாய்க்கிழமையும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.இத்துடன், கடந்த திங்கள்க... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: அனுதாபமா, ஆதாய அலையா?

நமது சிறப்பு நிருபர்வரும் நவம்பர் 20-ஆம் தேதி மகாராஷ்டிர சட்டப்பேரவைக்குத் தேர்தல்! 1985-ஆம் ஆண்டுக்கு பின்னர் மகாராஷ்டிரத்தில் எந்தவொரு கட்சிக்கும் பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ... மேலும் பார்க்க

பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சோ்ப்பு: காஷ்மீரில் காவல் துறை சோதனை

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத இயக்கத்துக்கு ரகசியமாக ஆள் சோ்ப்பது தொடா்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த யூனியன் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையின் உளவுப் பிரிவினா் திங்கள்கிழம... மேலும் பார்க்க

சபரிமலையில் முழு வீச்சில் ஏற்பாடுகள்: திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் தகவல்

சபரிமலை மண்டல பூஜை-மகரவிளக்கு யாத்திரை காலம் நெருங்கி வரும்நிலையில் பக்தா்களுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. சபரிமலை ஐயப்பன்... மேலும் பார்க்க