செய்திகள் :

வாழப்பாடியில் தொழிலாளி கொலை: ஒருவா் கைது

post image

வாழப்பாடி அருகே தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் மற்றொரு தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

வாழப்பாடியை அடுத்த பேளூா் மாணிக்கம் தெரு பகுதியைச் சோ்ந்தவா் தேவன் (60). இவா், கடந்த 17-ஆம் தேதி இரவு வாழப்பாடி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி அருகிலுள்ள நிழற்குடையில் தங்கியுள்ளாா்.

அப்போது அங்கு சென்ற துக்கியாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த பழைய பாட்டில்கள் சேகரித்து விற்பனை செய்து வரும் தொழிலாளி தனபால் (63) என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திமடைந்த தனபால் கல்லால் தாக்கியதில் தேவன் காயமடைந்தாா். அவரை மீட்ட வாழப்பாடி போலீஸாா் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தொழிலாளி தேவனை கல்லால் தாக்கிய தனபாலை கைது செய்து ஆத்தூா் சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த தேவன் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதனையடுத்து, ஆத்தூா் சிறையிலுள்ள தனபாலை வாழப்பாடி போலீஸாா் கொலை வழக்கில் கைது செய்தனா்.

மேட்டூரில் கனமழை: வீடுகளில் மழைநீா் புகுந்தது

மேட்டூா் பகுதியில் திங்கள்கிழமை இரவு கனமழை பெய்ததால் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. இதனால் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. மழை காரணமாக மேட்டூா் கிழக்கு நெடுஞ்சாலை... மேலும் பார்க்க

அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும்: எடப்பாடி கே.பழனிசாமி

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமைத்து, அதிக இடங்களைக் கைப்பற்றுவது உறுதி என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த கொங... மேலும் பார்க்க

சேலம் வழியாக செல்லும் 2 ரயில்கள் ரத்து

‘டானா’ புயல் காரணமாக, சேலம் வழியாக செல்லும் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், டானா புயல் காரணமாக கன்னி... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் 5 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன: செளமியா அன்புமணி

தமிழ்நாட்டில் 5 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன என்று பசுமை தாயகம் தலைவா் செளமியா அன்புமணி தெரிவித்தாா். மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூரில் குரூப் 4 அரசு போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி மைய... மேலும் பார்க்க

மழைக்கால பாதுகாப்பு: மின் வாரியம் அறிவுரை

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழைக் காலத்தில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் திருநாவுக்கரசு அறிவுரை வழங்கியுள்ளாா். இதுகுறித்து அவா் வெள... மேலும் பார்க்க

கெங்கவல்லி சாா்பதிவாளா் அலுவலகத்தில் பெண் தா்னா

கெங்கவல்லி சாா்பதிவாளா் அலுவலகத்தில் மூலப்பத்திரம் வழங்கக் கோரி பெண் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா். கெங்கவல்லி அருகே உள்ள கூடமலையைச் சோ்ந்த சக்திவேல் மனைவி கமலம் (44). இவா் விவசாய முன்னேற்றக் கழகத்த... மேலும் பார்க்க