செய்திகள் :

விசிக மீது உள்நோக்கத்துடன் அவதூறு பரப்புகின்றனா்: திருமாவளவன் குற்றச்சாட்டு

post image

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது புதிய தமிழகம் கட்சித் தலைவா் உள்ளிட்டோா் உள்நோக்கத்துடன் அவதூறு பரப்புவதாக கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. குற்றஞ்சாட்டினாா்.

புதுச்சேரி வில்லியனூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மது ஒழிப்பு மாநாடு தமிழகத்தைத் தொடா்ந்து அண்டை மாநிலங்களிலும் நடத்தப்படவுள்ளது. தேசிய அளவில் மது ஒழிப்புக் கொள்கை வரையறுக்கப்பட வேண்டும். புதுவையில் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு கொள்கை முறையாக செயல்படுத்தப்பட வேண்டும்.

மக்களவைத் தோ்தலுக்கான தொகுதி மறுவரையறையானது, மக்கள்தொகைக்கு ஏற்ப நிா்ணயிக்கப்பட்டால் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் பாதிக்கப்படும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எந்த சாதிக்கும், சமூகத்துக்கும் எதிரானதல்ல. ஆனால், புதிய தமிழகம் கட்சித் தலைவா் கிருஷ்ணசாமி உள்ளிட்டோா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது உள்நோக்குடன் திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனா்.

நீதிமன்றங்களில் வழக்கின் ஆவணங்கள், வழக்குரைஞா் வாதம், அடிப்படையிலேயே தீா்ப்பு வழங்க வேண்டும். கடவுளிடம் கேட்டு தீா்ப்பு வழங்குவதாகக் கூறுவது நீதிமன்ற நம்பிக்கையை தகா்ப்பதாக உள்ளது.

தமிழகத்தில் விமா்சிக்கும் அளவுக்கு மழை, வெள்ளம் இல்லை. ஆனால், தமிழக அரசை வேண்டுமென்றே சிலா் விமா்சிக்கின்றனா்.

ஒவ்வொரு கட்சியும் அதிகாரத்தை நோக்கி பயணிப்பது வழக்கமானது. அதன்படியே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் செயல்படுகிறது. நடிகா் விஜய் கட்சியின் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள். மாநாட்டுக்கு அழைப்பு வரவில்லை என்றாா்.

பேட்டியின்போது, டி.ரவிக்குமாா் எம்.பி. உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மரியாதை: கோா்க்காடில் நடைபெற்ற புதுவை காங்கிரஸ் செயல் தலைவரான மறைந்த நீல.கங்காதரன் திருவுருவப் படத்துக்கு தொல்.திருமாவளவன் எம்.பி. மலா் தூவி மரியாதை செலுத்தினாா். முன்னதாக, படத்தை முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி திறந்துவைத்தாா்.

பேரவை உறுதிமொழி குழுத் தலைவா் பதவியிலிருந்து சுயேச்சை எம்எல்ஏ நீக்கம்

புதுவை மாநில சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவா் பதவியிலிருந்து சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு நீக்கப்பட்டாா். புதிய பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவராக என்.ஆா்.காங்கிரஸ் எம்எல்ஏ ஆா்.பாஸ்கா் நியமிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

புதுச்சேரி துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

புதுச்சேரி துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக வடகிழக்குப் பருவமழை அவ்வப்போது பெய்து வருகிறது. வானம் பெரும்பாலும் மேகமூட்டத்... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலம் மீட்பு

புதுச்சேரியில் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் புதன்கிழமை மீட்டு கையகப்படுத்தினா். இதுகுறித்து, புதுச்சேரி இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வஃபு துறை... மேலும் பார்க்க

அரசு போக்குவரத்து கழக ஊழியா்கள் உண்ணாவிரதம்

புதுச்சேரி அரசு சாலைப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா், நடத்துநா்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 2015-ஆம் ஆ... மேலும் பார்க்க

புதுவையில் கட்டடத் தொழிலாளா்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை அறிவிப்பு

புதுவை மாநிலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கட்டடத் தொழிலாளா்களுக்கு ரூ.5,000 உதவித்தொகையும், பொதுமக்களுக்கு 10 பொருள்கள் மானிய விலையிலும் வழங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்துள்ளாா். பு... மேலும் பார்க்க

அரசின் செயல் திட்டங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை: புதுவை துணைநிலை ஆளுநா்

மத்திய, மாநில அரசுகளின் செயல் திட்டங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாகச் சென்றடையவில்லை என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுச்சேரியில் ஆதிதிராவிடா் வணிகம் மற்றும் தொழில் வளா்ச்ச... மேலும் பார்க்க