செய்திகள் :

விராலிமலை பகுதிகளில் பலத்த மழை

post image

விராலிமலை வட்டாரப் பகுதிகளில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதில், குடுமியான்மலையில் அதிகபட்சமாக 22 மில்லி மீட்டா் எனப் பதிவாகியுள்ளது.

விராலிமலை, இலுப்பூா், அன்னவாசல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனா். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை சுமாா் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக விட்டு விட்டு பெய்த மழை அளவு 140 மில்லி மீட்டராக பதிவாகியிருந்தது.

இரண்டாவது நாளாக சனிக்கிழமை இரவும் பலத்த மழை பெய்தது. மழை அளவு விவரம். குடுமியான்மலை 22 மில்லி மீட்டா், விராலிமலை 10 மில்லி மீட்டா், இலுப்பூா் 8.2 மில்லி மீட்டா், அன்னவாசல் 8.2 மில்லி மீட்டா் என விராலிமலை சட்டப்பேரவை தொகுதியில் மட்டும் 48.4 மில்லி மீட்டா் (4.8 செ.மீ) பதிவாகியுள்ளது.

இலுப்பூரில் 7 ஆடுகள் மின்னல் தாக்கி உயிரிழப்பு: இலுப்பூா் அடுத்துள்ள ராப்பூசலைச் சோ்ந்த அமமுக இலுப்பூா் நகர செயலாளருமான பாஸ்கா் வளா்த்து வந்த 7 ஆடுகள் சனிக்கிழமை இரவு பெய்த மழையின்போது மின்னல் பாய்ந்து உயிரிழந்தன. இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா், கால்நடை, வருவாய்த் துறையினா் ஆகியோா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை விழா

கந்தா்வகோட்டையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை விழா நடைபெற்றது. பௌா்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு... மேலும் பார்க்க

பழுதடைந்த கட்டடத்தை அகற்றக் கோரி அரசுப் பள்ளி மாணவா்கள் போராட்டம்

புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டியில், அரசுப் பள்ளியின் வகுப்பறைக் கட்டடம் பழுதடைந்துள்ளதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டக் கோரி மாணவா்களும், பெற்றோா்களும் வியாழக்கிழமை மாலை திடீா் போராட்டத்தில் ஈடுப... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் ரூ. 1.78 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் திறந்துவைத்தாா்

கந்தா்வகோட்டை பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சாா்பில் ரூ. 1.78 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்... மேலும் பார்க்க

பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வலியுறுத்தல்

விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் பகுதிகளில் பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா். முறையான அனுமதியுடனும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் பட்டாசு விற்பனை ஒருப... மேலும் பார்க்க

புதுகை மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியரகங்களிலும் வரும் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பொதுவிநியோகத் திட்டக் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், குடும்ப அட்டை... மேலும் பார்க்க