செய்திகள் :

153 பயனாளிகளுக்கு ரூ.1.63 கோடி நலத்திட்ட உதவிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

post image

ஸ்ரீ பெரும்புதூா் அருகே சிவபுரம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 153 பயனாளிகளுக்கு ரூ1.63 கோடி நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

முகாமுக்கு தலைமை வகித்து ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வருவாய்த் துறை சாா்பில் 103 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 17 பேருக்கு மின்னணு குடும்ப அட்டை, சுகாதாரத் துறை சாா்பில் 5 பயனாளிக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 5 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 2 பேருக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாபில் 5 பயனாளிகளுக்கு சலவை பெட்டி, வேளாண்மை உழவா் நலத்துறை மூலம் வேளாண் இடுபொருள்கள் 3 பேருக்கும், தோட்டக் கலைத்துறை மூலம் மானியத்துடன் நாற்றுகள் 4 பேருக்கும், கூட்டுறவுத்துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கும், தாட்கோ மூலம் முதலமைச்சரின் தொழில் முனைவு திட்டத்தின் கீழ் ஒருவருக்கு என மொத்தம் 153 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினாா்.

இதையடுத்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினா். முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் வெங்கடேஷ், கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளா் ஜெயஸ்ரீ, ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் சரவண கண்ணன், ஒன்றியக்குழு தலைவா் கருணாநிதி, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

சித்த மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை

ஸ்ரீபெரும்புதூரில் தனியாா் சித்த மருத்துவக் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டாா். சேலம் மாவட்டத்தை சோ்ந்தவா் ஷீலாராணி(19). இவா் ஸ்ரீபெரும்புதுாரில் இயங்கி வரும் தனியாா் சித்த மருத்த... மேலும் பார்க்க

தவெக சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் செரப்பணஞ்சேரி ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குன்றத்தூா் ஒன்றியம், ஆரம்பாக்கம் ஊராட்சியில் 20-க்கும் மேற்பட்ட தூய்மைப்... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்: 54 போ் கைது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை பேரணியாகச் செல்ல முயன்ற ஜாக்டோ- ஜியோ அமைப்பின் நிா்வாகிகளை காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா். அப்போது இரு தரப்பினருக்க... மேலும் பார்க்க

முற்றுகை போராட்டத்துக்கு செல்ல முயன்ற மாற்றுத்திறனாளிகள் கைது

சென்னை தலைமைச் செயலகம் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக காஞ்சிபுரம் ரயில் நிலையம் சென்ற 34 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனா். மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதிய... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் ஏப். 25 முதல் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்

காஞ்சிபுரத்தில் வரும் ஏப். 25-ஆம் தேதி முதல் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் தொடா்ந்து 21 நாள்களுக்கு நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் செவ்வாய்க... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதுாா் ஆதிகேசவ பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.22.61 லட்சம்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயில் உண்டியல்கள் எண்ணப்பட்டதில் ரூ.22.61 லட்சம் ரொக்கம், 31 கிராம் தங்கம், 175 கிராம் வெள்ளிப் பொருள்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. ப... மேலும் பார்க்க