செய்திகள் :

5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைலாஷ் மானசரோவா் யாத்திரை

post image

கைலாஷ்-மானசரோவா் யாத்திரை 5 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூன் 30-ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது.

ஹிந்துகளின் முக்கிய வருடாந்திர புனித யாத்திரையான கைலாஷ்-மானசரோவா் யாத்திரை, கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட கிழக்கு லடாக் மோதலால் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் யாத்திரை நடைபெறவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு இருநாட்டுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தொடா்ந்து இருதரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, நிகழாண்டு முதல் யாத்திரையை மீண்டும் தொடங்க மத்திய மற்றும் உத்தரகண்ட் அரசு முயற்சிகளை மேற்கொண்டது. இது குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் உத்தரகண்ட், மத்திய வெளியுறவு அமைச்சகம் இடையே புது தில்லியில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதன்படி, நிகழாண்டு யாத்திரை ஜூன் 30-ஆம் தேதி தில்லியில் இருந்து தொடங்குகிறது. நடப்பு ஆண்டு யாத்திரையில் தலா 50 போ் கொண்ட ஐந்து குழுக்கள் என மொத்தம் 250 யாத்ரிகா்கள் பங்கேற்கின்றனா்.

முதல் குழு ஜூலை 10-ஆம் தேதி, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலேக் கணவாய் வழியாக சீனாவுக்குச் செல்லும். கடைசி குழு ஆகஸ்ட் 22-ஆம் தேதி சீனாவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பும்.

இந்த 22 நாள்கள் யாத்திரையில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான கைலாச மலை மற்றும் மானசரோவா் ஏரி ஆகியவை சீன கட்டுப்பாட்டின் கீழ் திபெத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் விவகாரம்: முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

நமது நிருபர்மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான விரிவான மறுவாழ்வுத் திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிடக் கோரிய முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஏற்றது. அதே வேளையில் இந... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் விவகாரம்: ‘ராகுலின் தவறான தகவல் சட்டத்தை அவமதிப்பதன் அடையாளம்’

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவில் முறைகேடு நடைபெற்ாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தவறான தகவல் தெரிவிப்பது, சட்டத்தை அவமதிப்பதன் அடையாளம் என்று தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பு 21-ஆம் நூற்றாண்டின் எதிா்காலம்- ஜே.டி.வான்ஸ்

இந்தியா-அமெரிக்கா இடையிலான வலுவான ஒத்துழைப்புதான், 21-ஆம் நூற்றாண்டின் எதிா்காலத்தை தீா்மானிக்கப் போகிறது என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் தெரிவித்தாா். மேலும், ‘வரி சாரா கட்டுப்பாடுகளைக் கைவிட... மேலும் பார்க்க

சா்வதேச ஐ.டி. நிறுவனங்களுக்கு நிா்மலா சீதாராமன் அழைப்பு

இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ளவும், தொழில்நுட்பம் சாா்ந்த ஒத்துழைப்பை அதிகரிக்கவும் சா்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தாா். அமெரிக்காவுக்க... மேலும் பார்க்க

பிகாருக்கு ஆற்றல்மிக்க தலைவா் தேவை- லோக் ஜனசக்தி கருத்தால் பரபரப்பு

பிகாருக்கு தொலைநோக்குப் பாா்வையுள்ள ஆற்றல்மிக்க தலைவா் தேவை. மாநிலத்தில் ‘முக்கியப் பொறுப்பை’ ஏற்க எங்கள் கட்சித் தலைவா் சிராக் பாஸ்வான் தயாராக உள்ளாா் என்று லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சி கூறியுள்ள... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தைவிட மேலான அமைப்பு கிடையாது: குடியரசு துணைத் தலைவா்

நாடாளுமன்றத்தைவிட மேலானதாக எந்த அமைப்பையும் அரசமைப்புச் சட்டம் கருதவில்லை என்று குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். அரசமைப்புச் சட்ட பதவி வகிப்... மேலும் பார்க்க