செய்திகள் :

Jayasurya: ``நான் வாழும் தியாகி!'' - பாலியல் வழக்கில் போலீஸிடம் ஜெயசூர்யா அளித்த விளக்கம் என்ன?

post image
தன் மீது பொய்யான வழக்கு புனையப்பட்டுள்ளதாகவும், தான் ஒரு வாழும் தியாகி என்றும் மலையாள நடிகர் ஜெயசூர்யா பாலியல் புகார் தொடர்பான விசாரணையின்போது காவல் துறையிடம் தெரிவித்திருக்கிறார்.

கேரளாவின் ஆலுவாவைச் சேர்ந்த பெண் ஒருவர் நடிகர் ஜெயசூர்யா மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இதையடுத்து அவர் மீது திருவனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக திருவனந்தபுரம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நடிகர் ஜெயசூர்யாவுக்கு காவல் துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர்.

ஜெயசூர்யா

இந்த விசாரணையில் காவல் துறையினரிடம் விளக்கம் அளித்த நடிகர் ஜெயசூர்யா, “என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நான் மறுக்கிறேன். என் மீதான பாலியல் புகார் முற்றிலும் புனையப்பட்டது. எனக்கு முன்ஜாமீன் கூட தேவையில்லை. என் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்று நிரூபிக்கும் வரை நான் தொடர்ந்து சட்ட ரீதியாக போராடுவேன். நான் வாழும் தியாகி என்பதை நம்புகிறேன்.

ஜெயசூர்யா

யார் மீது வேண்டுமானாலும் பொய் வழக்கு போடலாம் என்பது ஆபத்தானது. குறைந்தபட்சம் என் வழக்கை எதிர்கொள்ள எனக்கு ஒரு தளம் உள்ளது. பலருக்கு அப்படி எதுவும் இல்லை. இப்படியான பொய் வழக்குகள் பலரது குடும்பத்தையும் சீர்குலைத்து விடுகிறது” என தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

`மம்மூட்டியை அமைச்சராக்குங்க சுரேஷ் கோபி' - கூட்டத்தில் ஒலித்த குரல்; மம்மூட்டியின் ரியாக்‌ஷன் என்ன?

நடிகர் சுரேஷ் கோபி பா.ஜ.க-வில் இணைந்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மத்திய அமைச்சர் ஆகி உள்ளார். பல சினிமாக்களில் நடித்துக் கொடுக்கவேண்டியது உள்ளதால், த... மேலும் பார்க்க

Sushin Shyam: `ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு!' - சினிமாவிலிருந்து பிரேக் எடுக்கும் சுஷின் ஷ்யாம்!

`போகைன்வில்லா' படத்திற்குப் பிறகு ஒரு சிறிய இடைவெளி எடுத்துக் கொள்ளப்போவதாக இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் அறிவித்திருக்கிறார்.மலையாள சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் சுஷின் ஷ்யாம் டாப் இடத்தை இறுக்... மேலும் பார்க்க

Bougainvillea Review: ஆழமான நடிப்பு, உளவியல் பார்வை, ஸ்டைலிஷ் மேக்கிங்; ஆனால் இவை மட்டும் போதுமா?

இடுக்கி மாவட்டத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார் ராய்ஸ் தாமஸ் (குஞ்சாக்கோ போபன்). எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கார் விபத்து ஒன்றில், அவரது மனைவி ரீத்துவிற்கு (ஜோதிர்மயி) தலையில் பலத்த அடி படவ... மேலும் பார்க்க