செய்திகள் :

Russia : ட்ரம்ப், மோடிக்கு நன்றி சொன்ன புதின்; உக்ரைன் - ரஷ்யா போர்நிறுத்தம் சாத்தியப்படுமா?

post image

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைனில் 30 நாள்கள் போர் நிறுத்தம் அறிவிப்பதற்கான அமெரிக்காவின் திட்டம் குறித்து முதன்முறையாகப் பேசியுள்ளார். 

கடந்த வியாழன் அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற நாட்டுத் தலைவர்கள் தங்களது பல கடமைகளுக்கு மத்தியில் உக்ரைன் பிரச்னையை கவனிப்பதற்காக நன்றி தெரிவித்தார். 

Russia அதிபர் பேசியதென்ன?

"முதலில் நான் நன்றியுணர்வை வெளிப்படுத்துவதுடன் தொடங்க விரும்புகிறேன். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உக்ரைனுக்கு அதிக கவனம் செலுத்துவதற்காக நன்றி கூறுகிறேன். நம் அனைவருக்கும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. ஆனால் பல நாட்டுத் தலைவர்கள் சீன குடியரசின் தலைவர், இந்தியாவின் பிரதமர், பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஜனாதிபதிகள் இந்தப் பிரச்னைக்காக அதிக நேரம் செலவழித்துள்ளனர். அவர்கள் பகையும் மனித உயிரிழப்புகளையும் தடுக்கும் உன்னத நோக்கோடு இதில் தலையிடுவதனால் நாங்கள் நன்றிக்கடனுடன் இருக்கிறோம்." எனப் பேசியுள்ளார்.

trump

இந்தியாவின் நிலைப்பாடு

கடந்த மாதம் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரைச் சந்தித்த மோடி, உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தில் இந்தியா நடுநிலைமையைப் பின்பற்றவில்லை என வலியுறுத்தியுள்ளார். "இந்தியா நடுநிலைமையில் இல்லை, இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது. நான் ஏற்கெனவே அதிபர் ட்ரம்ப்பிடம் இது போருக்கான காலம் இல்லை என்பதை வலியுறுத்தியுள்ளேன். நான் அதிபர் ட்ரம்ப் எடுக்கும் முயற்சிகளை ஆதரிக்கிறேன்" என அமெரிக்காவில் பேசினார் மோடி. 

ரஷ்யா - உக்ரைன் போர் ஆரம்பித்தது முதல் பிரதமர் மோடி பலமுறை இரு நாட்டுத் தலைவர்களிடம் பேசியுள்ளார். "இது போருக்கான காலம் அல்ல... ராஜாந்திர உரையாடல்களுக்கான காலம்" என்றும் வலியுறுத்தி வருகிறார். 

போர் நிறுத்தம்!

ரஷ்யா எந்த நிபந்தனைகளும் விதிக்காமல் 30 நாள்கள் போர் நிறுத்தத்தை ஏற்க வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். 

ட்ரம்ப் முன்மொழிந்துள்ள போர் நிறுத்தத்தை ஆதரிப்பதாக புதின் கூறினாலும், இதில் சில 'நுணுக்கங்கள்' உள்ளதாகவும், இது எவ்வாறு செயல்படும் என்பதில் தனக்குச் சில 'கேள்விகள்' உள்ளதாகவும் கூறியுள்ளார். 

மறுபக்கம் உக்ரைன் அமெரிக்கா முன்மொழியும் போர் நிறுத்தத்தை ஏற்பதாக அறிவித்துள்ளது. 

TN Budget : 'வெற்று காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலைதான் இது' - பட்ஜெட் குறித்து விஜய்

தமிழ்நாட்டின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின... மேலும் பார்க்க

`பாஜக-வால் ஜெயலலிதாவின் ஆட்சியை வழங்க முடியும்!' - சொல்கிறார் டி.டி.வி.தினகரன்

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்,"திமுக திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்குவார்கள். ஆனால், அதை மக்களுக்காகச் செயல்படுத்த மாட்டார்கள். தமிழ்நாட்டில் பா.ஜ.க-... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: `தெற்கு தேய்கிறது; வடக்கு மேய்கிறது’ - ஆதவன் தீட்சண்யா | களம் பகுதி 4

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,`களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது ... மேலும் பார்க்க

"பாஜக கூட்டணி ஆட்சியில் மகளிருக்கு ரூ. 2500 உரிமைத் தொகை; மாவட்டத்திற்கு 2 நவோதயா பள்ளி - அண்ணாமலை

தென்காசி மாவட்ட பா.ஜ.க. சார்பில் தி.மு.க. அரசைக் கண்டித்து 'தீய சக்திகளை வேரறுப்போம்' எனும் தலைப்பில் புளியங்குடியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தலைமை... மேலும் பார்க்க

TVK: "விஜய்யின் டிரைவர் மகனுக்கு மா.செ பதவி; விஜய் காரை மறித்து மனு' - பனையூர் பரபர!

தமிழக வெற்றிக் கழகத்தின் 6 ஆம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை விஜய் இன்று வெளியிட்டிருக்கிறார். விஜய் முதல் 5 கட்டமாக மா.செ-களை அறிவித்தபோது பெரிய சலசலப்பில்லை. ஆனால், இன்று விஜய் அறிவித்திருக்கும... மேலும் பார்க்க

இந்தியாவில் முதல்முறை... TN BUDGET-ல் Twist வைத்த DMK Govt | Parliament | Imperfect Show

Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINKhttps://bit.ly/VikatanWAChannel மேலும் பார்க்க