செய்திகள் :

Varun Chakaravarthy : 'இந்திய ஓடிஐ அணியில் வருண் சக்கரவர்த்தி!' - வெளியான அறிவிப்பு!

post image
இந்திய டி20 அணியில் ஆடி சிறப்பான செயல்பாட்டை கொடுத்து வந்த வருண் சக்கரவர்த்தி, இப்போது முதல் முறையாக இந்தியாவின் ஓடிஐ அணியிலும் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
Varun Chakaravarthy

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஓடிஐ ஆட திட்டமிட்டிருந்தது. டி20 தொடர் நடந்து முடிந்திருக்கிறது. இந்திய அணி 4-1 என தொடரை ஆதிக்கமாக வென்றிருக்கிறது.

டி20 தொடரை இந்தியா வென்றதற்கு வருண் சக்கரவர்த்தி மிக முக்கிய காரணமாக இருந்திருந்தார். 5 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்திருந்தார். 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்தார். கம்பேக்குக்கு பிறகு ஆடிய அத்தனை டி20 தொடர்களிலும் சிறப்பாக ஆடியிருந்தார். உள்ளூர் அளவில் விஜய் ஹசாரே ஓடிஐ தொடரிலும் சிறப்பாக ஆடியிருந்தார். இதனால் இந்திய அணிக்கான ஓடிஐ தொடரிலும் வருண் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான ஓடிஐ தொடரிலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் வருணின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் பிசிசிஐ விமர்சனங்களையும் எதிர்கொண்டது.

இந்நிலையில்தான் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் முடிந்திருக்கும் சமயத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஓடிஐ தொடரில் வருணின் பெயரையும் பிசிசிஐ சேர்த்துள்ளது. முதல் ஓடிஐ போட்டி நாக்பூரில் நடக்கவிருக்கிறது.

Varun Chakaravarthy

இப்போது வருண் சக்கரவர்த்தி நாக்பூரில் இந்திய அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் வருண் சக்கரவர்த்தியின் பெயர் சேர்க்கப்படும் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

IPL 2025 : 'CSK க்கு முதல் போட்டியே மும்பையோடு!' - வெளியானது ஐ.பி.எல் அட்டவணை!

2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் ஐ.பி.எல் இன் 18 வது சீசன் மே 25 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.MI Matchesஇந்த சீசனின் முதல்... மேலும் பார்க்க

WPL : 'ஆர்ப்பரிக்கும் 5 அணிகள்; களமிறங்கும் சிங்கப்பெண்கள்!' - WPL Season 3 முழு விவரம்

WPL Season 3இந்திய மகளிருக்கான பிரீமியர் லீக் (WPL) 2025 போட்டிகள், பிப்ரவரி 14-ம் தேதி, அதாவது இன்று முதல் குஜராத் மாநிலத்திலுள்ள வதோதரா சர்வதேச மைதானத்தில் தொடங்க உள்ளது. மும்பை, பெங்களூரு போன்ற நகர... மேலும் பார்க்க

Rajat Patidar : 'Unsold' வீரர் டு ஆர்சிபியின் கேப்டன்! - எப்படி சாதித்தார் ரஜத் பட்டிதர்?

ஐ.பி.எல் இல் ரஜத் பட்டிதரை தங்களின் புதிய கேப்டனாக அறிவித்திருக்கிறது பெங்களூரு அணி. ரஜத் பட்டிதர் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஐ.பி.எல் ஏலத்தில் 'Unsold' ஆன வீரர். பெங்களூரு அணி கூட அவர் மீது விருப்... மேலும் பார்க்க

RCB : 'கப் ஜெயிக்க என்ன பண்ணனுமோ அதை பண்ணுவோம்!' - ரஜத் பட்டிதர் உறுதி

பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். புதிய கேப்டனை அறிவிக்கும் நிகழ்ச்சியை பெங்களூருவில் நடத்தியிருந்தார்கள். அறிவிப்புக்கு பின் பெங்களூரு அணியின் புதிய கேப்டன... மேலும் பார்க்க

RCB : 'கோலியை ஏன் கேப்டன் ஆக்கவில்லை?' - ஆர்சிபி விளக்கம்

பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், பெங்களூரு அணியின் ரசிகர்கள் கோலியே அந்த அணியின் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், கோலிக்கு பத... மேலும் பார்க்க

Rajat Patidar : 'இந்த 3 காரணங்களால்தான் ரஜத்தை கேப்டன் ஆக்கினோம்' - RCB பயிற்சியாளர் ஆண்டி ப்ளவர்

பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இது கொஞ்சம் சர்ப்ரைஸ் முடிவுதான். ரஜத் பட்டிதரை ஏன் கேப்டனாக தேர்வு செய்தோம் என்பதற்கு பெங்களூரு அணியின் பயிற்சியாளர் ஆண்... மேலும் பார்க்க