செய்திகள் :

நீதிமன்றம் குறித்து அவதூறு பேச்சு; சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

post image

நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த 2024 ஆம் ஆண்டு யூடியூப் சேனல் ஒன்றுக்கு சீமான் பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் நீதித்துறையை அவமதிக்கும் வகையிலும், நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்தும் ஆபாச வார்த்தைகளால் பேசியதாகக் கூறி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர், போலீசில் புகார் அளித்திருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

இந்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், புகார் மீது வழக்குப்பதிய உத்தரவிடக் கோரி எழும்பூர் கோர்ட்டில் சார்லஸ் அலெக்சாண்டர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், புகார் மீது வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

சீமான்
சீமான்

இந்நிலையில் இன்று (அக்.19)நீதிமன்ற உத்தரவை அடுத்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Vijay-அ க்ளோஸாக வாட்ச் பண்ணும் Amit shah, Stalin-க்கு 10 சோதனைகள்? | Elangovan Explains

தைலாபுரம் ரூட் எடுக்கும் திமுக. பனையூருக்கு ரூட் போடும் பாஜக. பாமகவை சுற்றி பட்டாசு. ராமதாசை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு. அன்புமணியிடம் பாஜக போட்ட டீல். இன்னொரு பக்கம், விஜயை க்ளோசாக வாட்ச் பண்ணும் ... மேலும் பார்க்க

Trump: 'No Kings' ட்ரம்பிற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்; பின்னணி என்ன?

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பான கொள்கைகளை எதிர்த்து அமெரிக்காவின் பல்வேறு நகரங்கள் மற்றும் லண்டன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரு... மேலும் பார்க்க

TVK Vs TVK: Velmurugan காட்டம்| Annamalai நற்பணி மன்றம்?| BJP DMK ADMK | Imperfect Show 18.10.2025

* தமிழ்நாட்டில் தீபாவளிக்கு அடுத்த நாள் அரசு விடுமுறை!* கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நேற்று நள்ளிரவில் அலைமோதிய கூட்டம்* உயர்த்தப்பட்ட விமான கட்டணம்?* தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல - தேர்தல்... மேலும் பார்க்க

"பாகிஸ்தானை சீர்குலைக்க தீவிரவாதத்தை ஆயுதமாக இந்தியா பயன்படுத்துகிறது"- பாகிஸ்தான் ராணுவ தளபதி

கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் மோதல்களில், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் குண்... மேலும் பார்க்க

மதுரை: அடுத்த மேயர் யார்? - மதுரை திமுக-வில் நீடிக்கும் குழப்பம்!

மேயர் இந்திராணி பொன் வசந்த் ராஜினாமா செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்தாலும், அடுத்த மேயரை தேர்வு செய்வதில் மதுரை தி.மு.க-வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்திராணிமாநகராட்சி வரி மோசடி விவகாரத்த... மேலும் பார்க்க