செய்திகள் :

மும்பை: 72 வயது தொழிலதிபர் டிஜிட்டல் கைது; 6500 வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்ட ரூ.58 கோடி!

post image

மும்பையை சேர்ந்த 72 வயது பங்குச்சந்தை வியாபாரியை சைபர் கிரிமினல்கள் தங்களை அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ அதிகாரிகள் என்று கூறி டிஜிட்டல் முறையில் கைது செய்து ரூ.52 கோடியை வாங்கிக்கொண்டனர். முதியவர் மற்றும் அவரது மனைவியிடம் உங்களது வங்கிக்கணக்கில் சட்டவிரோத பணம் இருப்பதாகவும், அது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் இதற்காக உங்கள் இரண்டு பேரையும் டிஜிட்டல் முறையில் கைது செய்து இருப்பதாக தெரிவித்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி முதல் முறையாக அவர்கள் முதியவருக்கு போன் செய்து பேசியதோடு முதியவருக்கு சில ஆவணங்களையும் அனுப்பினர்.

வீடியோ காலில் சீருடை அணிந்த போலீஸ் அதிகாரிகள், போலி கோர்ட், நீதிபதி, வழக்கறிஞர்களையும் காட்டினர். பண மோசடி தொடர்பாக உங்களது வங்கி கணக்கு விசாரிக்கப்படுகிறது என்று கூறி சி.பி.ஐ .மற்றும் அமலாக்கப்பிரிவு சம்மனையும் அனுப்பினர்.

அதோடு நீங்கள் அனுப்பும் பணம் விசாரணைக்கு பிறகு திரும்ப கொடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். அனைத்தையும் பார்த்த முதியவர் அவர்கள் சொன்னபடி தனது வங்கிக்கணக்கில் இருந்த ரூ.58 கோடியை அவர்கள் கொடுத்த 18 வங்கிக்கணக்கிற்கு அனுப்பினார். 

இம்மோசடி தொடர்பாக முதியவர் கொடுத்த புகாரின் பேரில் இது வரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடி பணம் 4 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. இது குறித்து சைபர் கிரைம் பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,''பணம் டிரான்பர் செய்யப்பட்டவுடன் அது முடக்கப்பட்டுவிடக்கூடாது என்பற்காக இணைய தள குற்றவாளிகள் உடனே அப்பணத்தை மிகவும் கவனமாக வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றி இருக்கின்றனர்.

முதலில் ஒரு சில வங்கி கணக்குகளுக்கு மட்டுமே டிரான்ஸ்பர் செய்தனர். இதனால் அப்பணம் எளிதில் முடக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது ஒரேநேரத்தில் பணத்தை ஆயிரக்கணக்கான வங்கிக்கணக்கிற்கு சிறிது சிறிதாக பிரித்து அனுப்புகின்றனர். மும்பை முதியவரிடம் வாங்கிய ரூ58 கோடியை 6500 வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்துள்ளனர். அதோடு டிரான்ஸ்பர் செய்யப்படும் பணம் காசோலை மூலம் எடுக்கப்பட்டு அதே வங்கியில் வேறு ஒரு வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்துவிடுகின்றனர்.

இதற்கு முன்பு இப்பணத்தை ஏ.டி.எம் மூலம் எடுத்தனர். இதனால் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணமுடிந்தது. ஆனால் இப்போது வங்கிக்குள் சம்பவம் நடப்பதால் அங்கு அதிகமானோர் இருக்கின்றனர். இதனால் குற்றவாளிகளை அடையாளம் காணமுடிவதில்லை'' என்றார்.

இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் ராகசுதா கூறுகையில்,''டிஜிட்டல் கைது மூலம் பெறப்படும் பணத்தை பெற பயன்படுத்தப்படும் வாடகை வங்கிக்கணக்குகளுக்கு 3 முதல் 10 சதவீதம் வரை கமிஷன் கொடுக்கப்படுகிறது. மும்பை முதியவரிடம் சைபர் கிரிமினல்கள் வாங்கிய ரூ.58 கோடியில் கணிசமான தொகை சீனா மற்றும் கம்போடியாவிற்கு 27 வங்கிக்கணக்குகள் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு போலி கம்பெனிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது'' என்றார்.

72 வயது முதியவரை 40 நாட்கள் இக்கும்பல் டிஜிட்டல் முறையில் கைது செய்து வைத்திருந்தது. இதே போன்று மும்பையை சேர்ந்த மற்றொரு முதியவரை டிஜிட்டல் முறையில் கைது செய்து 70 லட்சம் ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு ஏஜென்சி மற்றும் தீவிரவாத தடுப்பு படையினர் போன்று முதியவரிடம் பேசி பணமோசடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்போம் என்று கூறி மிரட்டி 70 லட்சத்தை அபகரித்தனர். அது தொடர்பாக 15 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அதோடு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜபாளையம்: கனமழையால் இடிந்து விழுந்த சுவர்; 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் பரிதாபமாக உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இளந்திரை கொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மையப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர்களது குடும்பம் மூன்று தலைமுறைகளாக ஆடு மேய்க்கும் தொழிலைச் செய்து வருகிறது.... மேலும் பார்க்க

``குறைந்த விலைக்கு பட்டாசு; ஆன்லைன் விளம்பரம் நம்பி ஏமாறாதீர்’’ - எச்சரிக்கும் காவல்துறை!

வரும் 20-ம் தேதி, தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பொது மக்கள் பலரும் புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நேரத்தைப் பயன்படுத்தி, ஆன்லைன் மூலமாக குறைந்த விலைக்க... மேலும் பார்க்க

வரிச்சியூர் செல்வம் கூட்டாளி திண்டுக்கல் சிறையில் அடைத்த மறுநாளே மரணம் - பின்னனி என்ன?

கடந்த 2012 ஆம் ஆண்டு மதுரை தி.மு.க பிரமுகர் கதிரவனைக் கடத்தி ஒரு கும்பல் பணம் பறித்தது. மேலும் அந்தக் கும்பல், திண்டுக்கல்லில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருப்பரங்குன்றம் போலீசார... மேலும் பார்க்க

சபரிமலை: தங்கம் மோசடி வழக்கில் உண்ணிகிருஷ்ணன் போற்றி நள்ளிரவில் கைது; 10 மணி நேரம் விசாரணை!

சபரிமலை தங்க கவசம்சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் துவாரபாலகர் சிலை ஆகியவை செம்பு உலோகத்தால் அமைக்கப்பட்டிருந்த நிலையில், 1999-ம் ஆண்டு தொழிலதிபர் விஜய் மல்லையா தங்கம் பதிக்க சுமார் 30 கிலோ தங்கம் வழங்க... மேலும் பார்க்க

கரூர் 41 பேர் பலியான சம்பவம்: சி.பி.ஐ விசாரணை இன்று முதல் தொடக்கம் - பின்னணி என்ன?

தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கடந்த 27 - ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்நிலையில், தமிழக அரசு ஓய்வு பெற்ற உ... மேலும் பார்க்க

`ரூ.8 லட்சம்' கேட்ட DIG வீட்டில், ரூ.5 கோடி, 1.5 கிலோ தங்கம், சொகுசு கார்கள் பறிமுதல் - CBI அதிரடி

பஞ்சாப் டி.ஐ.ஜி ஹர்சரன் சிங்பஞ்சாப்பில் உள்ள ரோபர் மண்டலத்தில் டி.ஐ.ஜியாக இருப்பவர் ஹர்சரன் சிங். இவர் பதேகர் சாஹிப் பகுதியைச் சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி ஆகாஷ் என்பவரிடம் ரூ.8 லட்சம் லஞ்சம் கேட்டார... மேலும் பார்க்க