செய்திகள் :

``குறைந்த விலைக்கு பட்டாசு; ஆன்லைன் விளம்பரம் நம்பி ஏமாறாதீர்’’ - எச்சரிக்கும் காவல்துறை!

post image

ரும் 20-ம் தேதி, தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பொது மக்கள் பலரும் புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நேரத்தைப் பயன்படுத்தி, ஆன்லைன் மூலமாக குறைந்த விலைக்கு பட்டாசுகள் விற்கப்படுவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறது இணையத்தை தவறாகப் பயன்படுத்தக்கூடிய மோசடி கும்பல்கள்.

குறிப்பாக, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களின் வழியாக இதுபோன்ற மோசடிகள் அதிகம் நடைபெறுவதாகவும், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் காவல்துறை எச்சரிக்கையோடு அறிவுறுத்தியிருக்கிறது.

பட்டாசு

இது தொடர்பாக, காவல்துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ``போலியான வெப்சைட் வாயிலாகவும் விளம்பரப்படுத்தி, மக்களை நம்ப வைத்து, பணத்தை பெற்றுக்கொண்டு பட்டாசுகளை அனுப்பாமல் ஏமாற்றும் மோசடிகள் நடைபெற்று வருகிறது. மேலும், சமூகவலைதள பிரபலங்களின் புரொமோஷன் வீடியோக்களின் உண்மைத்தன்மையை ஆராயாமல் குறைந்த விலைக்கு பட்டாசுகளை வாங்க பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம்.

இது சம்பந்தமாக, புகார்களும், சைபர் கிரைம் காவல் நிலையங்களில் குவிந்த வண்ணம் உள்ளது. எனவே, மேலே சொன்னவாறு யாரேனும் ஏமாற்றப்பட்டிருந்தால் அருகிலுள்ள காவல் நிலையத்திலோ, அல்லது சைபர் கிரைம் புகாரளிப்பு இலவச எண் 1930 வாயிலாகவோ அல்லது சைபர் கிரைம் புகாரளிப்பு இணையதளம் www.cybercrime.gov.in வாயிலாகவோ புகார் அளிக்கலாம்’’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ராஜபாளையம்: கனமழையால் இடிந்து விழுந்த சுவர்; 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் பரிதாபமாக உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இளந்திரை கொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மையப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர்களது குடும்பம் மூன்று தலைமுறைகளாக ஆடு மேய்க்கும் தொழிலைச் செய்து வருகிறது.... மேலும் பார்க்க

வரிச்சியூர் செல்வம் கூட்டாளி திண்டுக்கல் சிறையில் அடைத்த மறுநாளே மரணம் - பின்னனி என்ன?

கடந்த 2012 ஆம் ஆண்டு மதுரை தி.மு.க பிரமுகர் கதிரவனைக் கடத்தி ஒரு கும்பல் பணம் பறித்தது. மேலும் அந்தக் கும்பல், திண்டுக்கல்லில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருப்பரங்குன்றம் போலீசார... மேலும் பார்க்க

சபரிமலை: தங்கம் மோசடி வழக்கில் உண்ணிகிருஷ்ணன் போற்றி நள்ளிரவில் கைது; 10 மணி நேரம் விசாரணை!

சபரிமலை தங்க கவசம்சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் துவாரபாலகர் சிலை ஆகியவை செம்பு உலோகத்தால் அமைக்கப்பட்டிருந்த நிலையில், 1999-ம் ஆண்டு தொழிலதிபர் விஜய் மல்லையா தங்கம் பதிக்க சுமார் 30 கிலோ தங்கம் வழங்க... மேலும் பார்க்க

கரூர் 41 பேர் பலியான சம்பவம்: சி.பி.ஐ விசாரணை இன்று முதல் தொடக்கம் - பின்னணி என்ன?

தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கடந்த 27 - ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்நிலையில், தமிழக அரசு ஓய்வு பெற்ற உ... மேலும் பார்க்க

`ரூ.8 லட்சம்' கேட்ட DIG வீட்டில், ரூ.5 கோடி, 1.5 கிலோ தங்கம், சொகுசு கார்கள் பறிமுதல் - CBI அதிரடி

பஞ்சாப் டி.ஐ.ஜி ஹர்சரன் சிங்பஞ்சாப்பில் உள்ள ரோபர் மண்டலத்தில் டி.ஐ.ஜியாக இருப்பவர் ஹர்சரன் சிங். இவர் பதேகர் சாஹிப் பகுதியைச் சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி ஆகாஷ் என்பவரிடம் ரூ.8 லட்சம் லஞ்சம் கேட்டார... மேலும் பார்க்க

ஈரோடு: பெண் குழந்தை கடத்தல், வேதனையில் பெற்றோர்; போலீஸார் தீவிர விசாரணை - நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், சித்தோடு கோணவாய்க்கால் என்ற இடத்தில் மேம்பாலத்துக்கு அடியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவெங்கடேஷ்,கீர்த்தனா தம்பதி,கடந்த சில மாதங்களாக அங்கு தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகின்றனர். ... மேலும் பார்க்க