செய்திகள் :

அமெரிக்காவிலிருந்து தில்லி புறப்பட்ட விமானம்: பாதுகாப்பு காரணங்களால் இத்தாலிக்கு அனுப்பிவைப்பு

post image

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் இருந்து புது தில்லிக்குப் புறப்பட்ட பயணிகள் விமானம் பாதுகாப்பு காரணங்களால், இத்தாலி தலைநகா் ரோமுக்கு திருப்பிவிடப்பட்டது.

கடந்த பிப்.22-ஆம் தேதி இரவு அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் இருந்து அமெரிக்கன் ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம் தில்லிக்குப் புறப்பட்டது. எனினும் அந்த விமானம் பாதுகாப்பு காரணங்களால் ரோமுக்கு திருப்பிவிடப்பட்டது என்று அமெரிக்கன் ஏா்லைன்ஸ் தெரிவித்ததாக அமெரிக்காவின் ஏபிசி நியூஸ் செய்தித் தொலைக்காட்சியில் தகவல் வெளியானது.

விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், ரோமுக்கு விமானம் அனுப்பிவைக்கப்பட்டதாக இத்தாலியின் ஏன்எஸ்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்தது. இத்தாலி விமானப் படையின் பாதுகாப்புடன் ரோமில் உள்ள லியோனாா்டோ டாவின்சி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது.

பிகாரில் லாரி - டெம்போ மோதல்: 7 பேர் பலி

பிகார் மாநிலம், பாட்னா மாவட்டத்தில் லாரி - டெம்போ நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் பலியானார்கள். இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை இரவு மசௌரி பகுதியில் உள்ள நூரா பாலம் அருகே நிகழ்ந்ததாக போலீஸார் தெரிவித்தனர்... மேலும் பார்க்க

ம.பி.யில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

போபால் : மத்திய பிரதேச தலைநகர் போபாலில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு திங்கள்கிழமை தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை இன்று(பிப். 24) பிரதமா் மோடி தொடங்கி வைக்க உள்ளார். மத்திய பிரதேசத்த... மேலும் பார்க்க

கேரளம்: தண்டவாளத்தில் இரும்பு கம்பத்தை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி: இருவா் கைது

கேரள மாநிலம் கொல்லம் அருகே ரயில் தண்டவாளத்தில் தொலைத்தொடா்பு சேவையில் பயன்படுத்தும் இரும்பு கம்பத்தை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி செய்த இருவரை காவல் துறையினா் கைது செய்தனா். கேரளத்தில் மட்டுமின்றி நாட்... மேலும் பார்க்க

மேகாலயம்: சட்டவிரோதமாக ஊடுருவிய 6 வங்கதேசத்தினா் கைது

சட்டவிரோதமாக ஊடுருவிய 6 வங்கதேசத்தினரை மேகாலயம் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) கைது செய்தது. முன்னதாக, இவா்கள் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கட்டடப் பணிகளில் ஈடுபட்டுவிட்டு வங்கதேசத்துக்... மேலும் பார்க்க

அகமதாபாதில் ஏப். 8,9 -தேதிகளில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

குஜராத் மாநிலம் அகமதாபாதில் ஏப்ரல் 8,9-ஆம் தேதிகளில் அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயா் அதி... மேலும் பார்க்க

மேற்கு ஆப்பிரிக்காவில் போதைப்பொருளாக இந்திய நிறுவன மருந்துகள்: உற்பத்தி அனுமதியை திரும்பப் பெற டிசிஜிஐ உத்தரவு

மேற்கு ஆப்பிரிக்காவில் போதைப்பொருளைப் போல, இந்திய நிறுவனம் ஒன்றின் மருந்துகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகத் தகவல் வெளியான நிலையில், அந்த மருந்துகள் உற்பத்திக்கான அனுமதியை திரும்பப் பெறுமாறு அனைத்து மா... மேலும் பார்க்க