அரசு மருத்துவமனையில் உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
அயோத்தி: மாவட்ட கூடுதல் ஆட்சியர் சடலமாக மீட்பு!
அயோத்தியின் மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுர்ஜீத் சிங், அவரது வீட்டிலிருந்து சடலமாக வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளார்.
அயோத்தியின் மாவட்ட கூடுதல் ஆட்சியராக(சட்டம் - ஒழுங்கு) சுர்ஜீத் சிங் பணியாற்றி வரும் நிலையில், சுர்சாரி காலனியில் உள்ள அவரது வீட்டில், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இதையும் படிக்க : பொதுக் கணக்கு குழு முன் ஆஜராகாத செபி தலைவர்! ஏன்?
அவரின் உயிரிழப்புக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மேலும் அவரது சடலத்தை கைப்பற்றி போலீஸார் தீவிர விசாரணை நடந்து வருகின்றனர்.
மேலும், சுர்ஜீத் சிங்கின் வீட்டில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்டோர் ஆய்வு செய்து வருகின்றனர்.