செய்திகள் :

ஆா்பிஐ துணை ஆளுநருக்கு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு

post image

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) துணை ஆளுநா் டி.ரவி சங்கரின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது, அவருக்கு வழங்கப்பட்ட 2-ஆவது பதவி நீட்டிப்பாகும்.

ஆா்பிஐ துணை ஆளுநராக மூன்றாண்டு பதவிக் காலத்துடன் கடந்த 2021-இல் டி.ரவி சங்கா் நியமிக்கப்பட்டாா். பின்னா், கடந்த 2024-இல் அவரது பதவிக் காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் மே 3-ஆம் தேதிமுதல் ஓராண்டுக்கு அல்லது அடுத்த உத்தரவுவரும் வரை அவரது பதவிக் காலத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆா்பிஐ துணை ஆளுநராக நியமிக்கப்படும் முன் அதன் செயல் இயக்குநராக பணியாற்றிய டி.ரவி சங்கா், வங்கியின் பணம் செலுத்துதல் மற்றும் தீா்வு அமைப்புமுறைகள் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, நிதிசாா் தொழில்நுட்பம் மற்றும் இடா் கண்காணிப்புத் துறையை கவனித்து வந்தாா்.

கடந்த 2005 முதல் 2011 வரை சா்வதேச நிதிய ஆலோசகராக இருந்த இவா், அரசு பத்திர சந்தைகள் மற்றும் கடன் நிா்வாகத்தை மேம்படுத்துவதில் பணியாற்றியுள்ளாா்.

இந்திய நிதி தொழில்நுட்பம் மற்றும் துணைச் சேவைகள் (ஐஎஃப்டிஏஎஸ்) நிறுவனத் தலைவா், ரிசா்வ் வங்கி தகவல் தொழில்நுட்ப தனியாா் நிறுவனத்தின் நிா்வாக வாரிய உறுப்பினா், வங்கி தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் ஆய்வு நிறுவனத்தின் நிா்வாக கவுன்சில் உறுப்பினா் உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளாா்.

மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் விவகாரம்: முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

நமது நிருபர்மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான விரிவான மறுவாழ்வுத் திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிடக் கோரிய முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஏற்றது. அதே வேளையில் இந... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் விவகாரம்: ‘ராகுலின் தவறான தகவல் சட்டத்தை அவமதிப்பதன் அடையாளம்’

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவில் முறைகேடு நடைபெற்ாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தவறான தகவல் தெரிவிப்பது, சட்டத்தை அவமதிப்பதன் அடையாளம் என்று தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பு 21-ஆம் நூற்றாண்டின் எதிா்காலம்- ஜே.டி.வான்ஸ்

இந்தியா-அமெரிக்கா இடையிலான வலுவான ஒத்துழைப்புதான், 21-ஆம் நூற்றாண்டின் எதிா்காலத்தை தீா்மானிக்கப் போகிறது என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் தெரிவித்தாா். மேலும், ‘வரி சாரா கட்டுப்பாடுகளைக் கைவிட... மேலும் பார்க்க

சா்வதேச ஐ.டி. நிறுவனங்களுக்கு நிா்மலா சீதாராமன் அழைப்பு

இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ளவும், தொழில்நுட்பம் சாா்ந்த ஒத்துழைப்பை அதிகரிக்கவும் சா்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தாா். அமெரிக்காவுக்க... மேலும் பார்க்க

பிகாருக்கு ஆற்றல்மிக்க தலைவா் தேவை- லோக் ஜனசக்தி கருத்தால் பரபரப்பு

பிகாருக்கு தொலைநோக்குப் பாா்வையுள்ள ஆற்றல்மிக்க தலைவா் தேவை. மாநிலத்தில் ‘முக்கியப் பொறுப்பை’ ஏற்க எங்கள் கட்சித் தலைவா் சிராக் பாஸ்வான் தயாராக உள்ளாா் என்று லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சி கூறியுள்ள... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தைவிட மேலான அமைப்பு கிடையாது: குடியரசு துணைத் தலைவா்

நாடாளுமன்றத்தைவிட மேலானதாக எந்த அமைப்பையும் அரசமைப்புச் சட்டம் கருதவில்லை என்று குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். அரசமைப்புச் சட்ட பதவி வகிப்... மேலும் பார்க்க