செய்திகள் :

இந்திய அணி வெற்றிக்கு வாழ்த்து: முதல்வர் ஸ்டாலின்

post image

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட விராட் கோலிக்கு வாழ்த்துகள். சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல இதே உத்வேகத்தோடு செயல்படுங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

முதலில் பாகிஸ்தான் 241 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து வென்றது.

இந்திய தரப்பில் பௌலிங்கில் குல்தீப் யாதவ், ஹா்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட, பேட்டிங்கில் விராட் கோலி சதம் விளாசி அசத்தினாா். ஷ்ரேயஸ் ஐயா், ஷுப்மன் கில்லும் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினா்.

போட்டியில் தற்போது தொடா்ந்து இரு வெற்றிகளைப் பதிவு செய்துள்ள இந்தியா, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

மறுபுறம், தொடா்ந்து இரு தோல்விகளை சந்தித்துள்ள பாகிஸ்தான், போட்டியிலிருந்து வெளியேறும் அச்சத்தில் இருக்கிறது.

‘முதல்வா் மருந்தகம்’ திட்டத்தை தொடக்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

மிகக் குறைந்த விலையில், மருந்துகளை விற்பனை செய்யும் ‘முதல்வா் மருந்தகம்’ திட்டம் தமிழகம் முழுவதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடக்கிவைத்தார்.சென்னை பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டிருக்கும் மருந்... மேலும் பார்க்க

அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா: செங்கோட்டையன் பங்கேற்கவில்லை!

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்வில், முன்னாள் அமைச்சரும் ... மேலும் பார்க்க

ஜெயலலிதா இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் மரியாதை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி நடிகர் ரஜினிகாந்த் மரியாதை செலுத்தினார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திற்கு திங்கள்கிழமை வருகை தந்த நடிகர் ரஜினிகாந்துக்கு சால்வை அண... மேலும் பார்க்க

சிதம்பரம் அருகே கிராமத்திற்குள் புகுந்த முதலை மீட்பு

சிதம்பரம் அருகே அம்மாப்பேட்டை கிராமத்தில் வீட்டு தோட்டத்திற்குள் புகுந்த முதலையை வனத்துறையினர் பிடித்தனர்.கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டத்தில் உள்ள அம்மாப்பேட்டை கிராமத்தின் தோப்புத்தெரு உள்ள சம்மந்த... மேலும் பார்க்க

ஜெயலலிதா புகழ் என்றும் நிலைத்திருக்கும்: அண்ணாமலை

ஜெயலலிதா புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், செல்வி ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த தினம்... மேலும் பார்க்க

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு! இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது.ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 8,055-க்கு விற்பனையாகிறது. ஒரு பவுன் ரூ. 64,440-க்கு விற்பனையாகிறது. சென்னையில் தங்க... மேலும் பார்க்க