செய்திகள் :

உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளைப் போல் செயல்பட முடியாது! -தலைமை நீதிபதி

post image

பனாஜி(கோவா): மக்களின் மன்றமாக செயல்படுவதே உச்சநீதிமன்றத்தின் கடமையாகும் என தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார்.

கோவாவில் இன்று(அக். 19) நடைபெற்ற உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் மாநாட்டில் தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் பேசியதாவது, “கடந்த 75 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டு வந்துள்ள உச்சநீதிமன்றத்தின் நீதிப் பாதையிலிருந்து நாம் விலகிச் செல்லலாகாது. மக்களின் நீதிமன்றமாக உச்சநீதிமன்றம் திகழ்ந்தாலும், எதிர்க்கட்சிகளின் கடமையை நாம் ஆற்ற வேண்டுமெனக் கூறக் கூடாது.

மக்களின் மன்றமாக செயல்பட வேண்டுமென்பதே உச்சநீதிமன்றத்தின் கடமை. இது இனி வருங்காலங்களிலும் கடைபிடிக்கப்பட வேண்டும். அதேநேரம், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுவது போல எதிர்க்கட்சிகளின் கடமைகளை உச்சநீதிமன்றம் செய்ய முடியாது.

இன்றைய காலக்கட்டத்தில், தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டால் உச்சநீதிமன்றத்தை சிறந்ததொரு அமைப்பாகவும், தங்களுக்கெதிராக தீர்ப்பளிக்கப்பட்டால் உச்சநீதிமன்றத்தை விமர்சிப்பதையும் பார்க்க முடிகிறது.இது ஆபத்தானது. தீர்ப்புகள் மூலம், உச்சநீதிமன்றத்தின் செயல்பாட்டை கணிக்கவோ எடை போடவோ கூடாது.

தனிப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமகவோ அல்லது எதிராகவோ வரலாம். வழக்குகளைப் பொறுத்து, நீதிபதிகள் சுதந்திரமான அணுகுமுறையுடன் முடிவெடுக்கிறார்கள். அதேநேரத்தில், தீர்ப்புகளில் தவறு இருப்பின் சுட்டிக்காட்டலாம்.

உச்சநீதிமன்றம் பணக்காரர்கள் தொடர்புடைய வழக்குகளை மட்டுமே கையாள்வதாக களத்தில் ஒரு கண்ணோட்டம் பரவலாக நிலவியது. நீதிமன்ற அமைப்புகளுக்கு வெளியே இருந்து பார்க்கும் மக்களுக்கு உள்ளே நடப்பது குறித்து அறிந்துகொள்ள முடியதென்பதால், உச்சநீதிமன்றத்தின் மீது குற்றச்சாட்டை சுமத்துவது எளிதானது.

ஆனால், நீதிமன்ற நடைமுறைகள் தற்போது நேரலையாக ஒளிபரப்பப்படுவது முக்கிய திருப்புமுனையாக விளங்குகிறது. நேரலை ஒளிபரப்பானது இவையனைத்தையும் மாற்றியுள்ளது.

ஏனெனில், மக்களின் மிகச்சிறிய பிரச்னைகள் கூட(முன் ஜாமீன் மனு உள்ளிட்டவை கூட), சாமானிய மனிதர்களின் பிரச்னைகள் கூட உச்சநீதிமன்றத்தால் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது என்பது இப்போது மக்களுக்கு தெரியும்” என்றார்.

ஹைதராபாத்: ஹிந்து அமைப்புகள் போராட்டத்தால் பதற்றம்! காவல்துறை தடியடி!

ஹைதராபாத்: சங்க் பரிவார் அமைப்புகளின் போராட்டத்தின்போது காவல்துறையினர் மீது காலணிகள் வீசப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.செகந்திராபாத் நகரிலுள்ள முத்யாலம்மன் கோயிலுக்குள் கடந்த அக்.14-ஆம் தேதி அதிகா... மேலும் பார்க்க

பூரண மதுவிலக்குதான் நிதீஷ்குமாரின் மிகப்பெரிய ஊழல்- தேஜஸ்வி யாதவ்

பூரண மதுவிலக்குதான் நிதீஷ்குமார் ஆட்சியின் மிகப்பெரிய ஊழல் என பிகார் முன்னாள் முதல்வர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். பிகாரின் சரண், சிவான் மாவட்டங்களில் உள்ள 16 கிராமங்களில் கள்ளச்சாராயம் ... மேலும் பார்க்க

பிகாா் கள்ளச் சாராய பலி எண்ணிக்கை 37-ஆக உயர்வு

பிகாரின் கள்ளச்சாராயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது.பிகாரின் சரண், சிவான் மாவட்டங்களில் உள்ள 16 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட பலா் மருத்துவம... மேலும் பார்க்க

சல்மான் கான் மீது கொலை முயற்சி: பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவருக்கு போலீஸ் காவல்

ஹிந்தி நடிகர் சல்மான் கானை கொல்ல முயற்சித்த சம்பவத்தில், கைது செய்யப்பட்ட பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவரை நான்கு நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.இரண்டு நாள்களுக்க... மேலும் பார்க்க

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதி

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்எம் கிருஷ்ணா சனிக்கிழமை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, உடல் பரிசோதனைக்காக பெங்களூரு பழைய விமான நிலைய சாலையில் உள்ள... மேலும் பார்க்க

கோடா பயிற்சி மையங்கள்: மாணவர் சேர்க்கை குறைந்தாலும் குறையாத தற்கொலைகள்

ராஜஸ்தான் மாநிலம் கோடா நகரில், இந்த கல்வியாண்டு தொடங்கியதிலிருந்து இதுவரை 15 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவர் சேர்க்கை குறைந்தாலும், தற்கொலைகள் குறையாத அவலத்தை... மேலும் பார்க்க