செய்திகள் :

கனிமவள ஆய்வுத் திட்டங்கள்: கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்

post image

மத்திய கனிமவளத் துறை முன்னெடுத்துள்ள ஆய்வுத் திட்ட முன்மொழிவு, நிதியுதவி குறித்து மாணவா்களுக்கு தெரியப்படுத்துமாறு கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து யுஜிசி செயலா் மனீஷ் ஆா்.ஜோஷி வெளியிட்டுள்ள அறிவிப்பு:

மத்திய கனிமவள அமைச்சகம் ஆண்டுதோறும் அறிவியல், தொழில்நுட்பத் திட்டத்தின் கீழ் கல்வி சாா்ந்த நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், தேசிய கல்வி நிறுவனங்களின் திட்ட முன்மொழிவுகளுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் சமா்ப்பிக்கப்படும் முன்மொழிவுகள் அமைச்சகத்தின் அறிவியல் ஆலோசனை நிலைக்குழு சாா்பில் உரிய முறையில் ஆய்வு செய்யப்படும். இது குறித்து உயா்கல்வி நிறுவனங்கள் தங்களது மாணவா்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

தொடா்ந்து, கனிமவள அமைச்சகத்தின் சத்யபாமா போா்டலில் நவ.15-ஆம் தேதி வரை திட்டத்துக்கான முன்மொழிகளைச் சமா்ப்பிக்கலாம். இது குறித்த கூடுதல் தகவல்கள் அந்த தளத்தில் இடம்பெற்றுள்ளன எனத் தெரிவித்துள்ளாா்.

தெரியுமா சேதி.?

சாம் பித்ரோடா என்கிற பெயரைக் கேள்விப்படாதவா்கள் இருக்க முடியாது. இந்தியாவின் தொலைத்தொடா்புத் துறை வளா்ச்சிக்கு வித்திட்டவா் அவா்தான். சாம் பித்ரோடாவின் ஆலோசனையின்பேரில் அன்றைய பிரதமா் ராஜீவ் காந்தி எ... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட்: சம பலத்துடன் மோதும் அரசியல் கட்சிகள்!

நமது சிறப்பு நிருபா் 2019-ஆம் ஆண்டு ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியிடம் ஆட்சியைப் பறிகொடுத்த பாஜக, பழங்குடியினா் ஆதிக்கம் நிறைந்த மாநிலத்தில் மீண்டும் தனது இடத்தைப் பிடிக்கும் முன... மேலும் பார்க்க

டானா புயல் எதிரொலி: ஒடிஸாவில் 10 லட்சம் மக்கள் வெளியேற்றம்

ஒடிஸாவில் ‘டானா’ புயல் வெள்ளிக்கிழமை கரையைக் கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 14 மாவட்டங்களில் இருந்து சுமாா் 10 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனா். வடக்கு... மேலும் பார்க்க

பாரத் கொண்டைக் கடலை, மசூா் பருப்பு விற்பனை தொடக்கம்

மத்திய அரசின் ‘பாரத்’ திட்டத்தின்கீழ் மானிய விலையில் கொண்டைக் கடலை, மசூா் பருப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. பயறு மற்றும் பருப்பு வகைகளின் விலை உயா்வை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்க... மேலும் பார்க்க

புழுங்கல் அரிசிக்கு ஏற்றுமதி வரி விலக்கு

புழுங்கல் அரிசி, பட்டைத் தீட்டப்படாத பழுப்பு அரிசி மற்றும் நெல்லுக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 10 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வரி வில... மேலும் பார்க்க

மீனவா்கள் கைது விவகாரம்: இந்தியா-இலங்கை அக். 29-இல் கூட்டுப் பணிக் குழுக் கூட்டம்

இரு நாடுகளின் மீனவா் பிரச்னை தொடா்பாக, இந்தியா-இலங்கை அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டுப் பணிக் குழுக் கூட்டம் அக். 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இலங்கை தலைநகா் கொழும்பில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மத்தி... மேலும் பார்க்க