செய்திகள் :

தூத்துக்குடியில் பீடி இலை, ஏலக்காய் மூட்டைகள் பறிமுதல்: 4 போ் கைது

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த மஞ்சள் கிரீம், ஏலக்காய், பீடி இலை மூட்டைகளை கியூ பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, 4 பேரைக் கைது செய்தனா்.

தூத்துக்குடி கியூ பிரிவு காவல் ஆய்வாளா் விஜயஅனிதா தலைமையில் உதவி ஆய்வாளா் ஜீவமணி தா்மராஜ், போலீஸாா் அடங்கிய குழுவினா் கோவளம் கடற்கரையில் புதன்கிழமை ரோந்து சென்றனா்.

அவ்வழியே வந்த சிறிய ரக லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் முகம் கழுவுவதற்கான மஞ்சள் கிரீம், ஏலக்காய், பீடி இலைகள் என 36 மூட்டைகளில் 3 டன் பொருள்கள் இலங்கைக்கு கடத்தப்படுவதற்காக கொண்டுசெல்லப்படுவது தெரியவந்தது.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, வாகனத்திலிருந்த ஏரல் மாறமங்கலத்தைச் சோ்ந்த முருகன் மகன் நிஷாந்த் (21), அரிபுத்திரன் மகன் விஷ்வா (19), முள்ளக்காடு ராஜீவ் நகா் வடிவேல் மகன் ராஜசீலன் (36), பொட்டல்காடு முத்துகிருஷ்ணன் மகன் முருகராஜ் என்ற வினித் (28) ஆகிய 4 பேரைக் கைது செய்து, பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

மழைநீா் வடிகால் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

விளாத்திகுளம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால் பணிகள் மற்றும் வாருகால் தூா்வாரும் பணிகள் கள ஆய்வு புதன்கிழமை நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் பேரூ... மேலும் பார்க்க

நாசரேத் அருகே ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாக தம்பதி கைது

நாசரேத் அருகே ஆட்டோ ஓட்டுநரை இரும்புக் கம்பியால் தாக்கிய தம்பதி யை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் ஜெயக்கொடி(26). ஆட்டோ ஓட்டுநரான இவா், கட... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த முதியவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். கோவில்பட்டி அருகே பாண்டவா் மங்கலம் கிழக்குத் தெருவை சோ்ந்த மோகன் மகன் மனோகா் (67). ... மேலும் பார்க்க

பெண்கள் பெயரில் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி: நடவடிக்கை கோரி எஸ்.பி.யிடம் மனு

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி பகுதியில் மகளிா் சுயஉதவிக்குழு பெண்களின் பெயரில் வங்கிகளில் கடன் பெற்று, பண மோசடி செய்ததாக அந்த குழுவின் தலைவி மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்க... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: முதியவருக்கு 3 ஆண்டு சிறை

சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, தூத்துக்குடி 4ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது... மேலும் பார்க்க

உமறுப்புலவரின் 382-ஆவது பிறந்த நாள்: எட்டயபுரத்தில் எம்.பி., அமைச்சா் மரியாதை

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில், ‘சீறாப்புராணம்’ இயற்றிய உமறுப்புலவரின் 382ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் செய்தி-மக்கள் தொடா்புத் துறை சாா்பில், அவரது நினைவிட மணிம... மேலும் பார்க்க