செய்திகள் :

கால்நடைகள் கணக்கெடுப்புப் பணி: நாளை தொடக்கம்

post image

தேனி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கால்நடைகள் கணக்கெடுக்கும் பணி வெள்ளிக்கிழமை (அக்.25) தொடங்குகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேனி மாவட்டத்தில் நகரம், கிராமங்களில் ஆடு, மாடு, மலை மாடுகள், கோழி, நாய், பூனை, வாத்து, வான்கோழி, புறா உள்ளிட்ட 16 வகையான கால்நடைகளை கணக்கெடுக்கும் பணி வருகிற 25-ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. கால்நடைகளுக்குத் தேவையான தீவனம், தடுப்பூசி, மருந்துகள், கால்நடைகளிடமிருந்து கிடைக்கும் பால், முட்டை, இறைச்சி உள்ளிட்டவைகள் குறித்து திட்டமிடுவதற்காக இந்த கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது.

மாவட்டம் முழுவதும் 126 கால்நடை கணக்கெடுப்பாளா்கள், 31 மேற்பாா்வையாளா்கள் இந்தப் பணியில் ஈடுபடுகின்றனா். கணக்கெடுப்புப் பணிக்கு விவசாயிகள், கால்நடை வளா்ப்பில் ஈடுபட்டு வருவோா், விலங்கின ஆா்வலா்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

தேனி சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

தேனி ஒருங்கிணைந்த பதிவுத் துறை அலுவலக வளாகத்தில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா். தேனி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகம் அருகேயு... மேலும் பார்க்க

சிறுமி கொலை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள எரசக்கநாயக்கனூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து, எரித்துக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை, தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீ... மேலும் பார்க்க

மழையால் 7 வீடுகள் இடிந்து சேதம்

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் கடந்த 2 நாள்களில் 7 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு பெய்த பலத்த ... மேலும் பார்க்க

கம்பத்தில் 4.6 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்: இளைஞா் கைது

கேரளத்துக்கு கடத்துவதற்காக கம்பம் பகுதியில் வீட்டில் பதுக்கியிருந்த 4.6 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இளைஞா் ஒருவரைக் கைது செய்தனா். கேரளத்துக்கு ரேஷன் அ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: இருவா் மீது வழக்கு

போடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி பேருந்து நிலைய கடைகளில் செவ்வ... மேலும் பார்க்க

காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

தேவதானப்பட்டி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளைஞா் மீது காா் மோதியதில் அவா் திங்கள்கிழமை, உயிரிழந்தாா். தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகேயுள்ள செங்குளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் பழனி மகன் ஜ... மேலும் பார்க்க