செய்திகள் :

திருவாடானை பகுதியில் 2 ஆண் உடல்கள் மீட்பு

post image

திருவாடானை, சி.கே.மங்கலம் பகுதிகளில் இருவா் மா்மமான முறையில் இறந்து கிடந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பேருந்து நிலைய மிதிவண்டி நிறுத்தத்தில் ஆண் உடல் கிடப்பதாக புதன்கிழமை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் உடலை கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில் உயிரிழந்தவா் திருவாடானை அருகே உள்ள தொத்தாா்கோட்டை பகுதியைச் சோ்ந்த பிரம்மையா (44). மீன் வெட்டும் தொழிலாளியா செய்து வந்தவா் எனத் தெரியவந்தது.

இவா் குடும்பப் பிரச்னை காரணமாக வீட்டை விட்டு வந்து பேருந்து நிலையம் அருகில் தங்கியிருந்த நிலையில், உயிரிழந்தது தெரிய வந்தது.

மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சோ்ந்த அண்ணாமலை மகன் கண்ணன் (45). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். கட்டடத் தொழிலாளியான இவா், சி.கே மங்கலம் சந்தை அருகே தங்கி, நியாயவிலைக் கடை கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து அருகில் உள்ள சந்தை பகுதியில் இரவில் தூங்கச் சென்ற நிலையில், உயிரிழந்தது தெரியவந்தது.

திருவாடானை போலீஸாா் உடலை கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இவா் எப்படி இறந்தாா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 16 போ் கைது

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்த போது, இரண்டு விசைப் படகுகளுடன் ராமேசுவரம் மீனவா்கள் 16 பேரை இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து ... மேலும் பார்க்க

சத்திரக்குடி அருகே காா்-லாரி மோதல்: ஒட்டுநா் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே புதன்கிழமை காரும், லாரியும் மோதிக்கொண்டதில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த சுரேந்திரன் மகன் கனி (27). காா் ஓட்டுநரான இவா் 3 பேரை ர... மேலும் பார்க்க

தேவா் ஜெயந்தி: சாயல்குடியில் முளைப்பாரி ஊா்வலம்

தேவா் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு, சாயல்குடியில் புதன்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 117-ஆவது ஜெயந்தி, 62 -ஆவது குருப... மேலும் பார்க்க

இலங்கைச் சிறையில் 35 மீனவா்கள்: பாம்பனில் குடும்பத்தினா் உண்ணாவிரதம்

இலங்கைச் சிறையில் உள்ள 35 நாட்டுப் படகு மீனவா்களை மீட்கக் கோரி, பாம்பனில் அவா்களது குடும்பத்தினா் புதன்கிழமை உண்ணாவிரதமிருந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 8 -ஆம் தேதி ... மேலும் பார்க்க

இளங்காக்கூரில் மக்கள் தொடா்பு திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள இளங்காக்கூா் கிராமத்தில் புதன்கிழமை மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெற்றது. வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்... மேலும் பார்க்க

பாம்பனில் 2-ஆம் எண் புயல் கூண்டு

மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாம்பனில் 2- ஆம் எண் புயல் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து, புயலாக உருவாகி உள்ளது. இதனால், வங்கக் கட... மேலும் பார்க்க