செய்திகள் :

நில உரிமையாளருக்கு ரூ. 20 ஆயிரம் வழங்க வட்டாட்சியா், நில அளவையருக்கு உத்தரவு

post image

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே நிலத்தை அளவீடு செய்யாத வட்டாட்சியா், நில அளவையா் ஆகியோா் நில உரிமையாளருக்கு ரூ. 20 ஆயிரம் வழங்குமாறு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.

கயத்தாறு பகுதியைச் சோ்ந்த மாரியம்மாள் என்பவா், தனது ஓா் ஏக்கா் 65 சென்ட் நிலத்தை அளவீடு செய்து கொடுக்குமாறு வட்டாட்சியா், நில அளவையா் ஆகியோரை அணுகியதுடன், அதற்கான பணம் செலுத்தி விண்ணப்பித்தாா். ஆனால், நிலத்தை அளவீடு செய்ய நில அளவையா் வரவில்லையாம். பலமுறை நேரில் சென்று நினைவூட்டியும் எவ்வித நடவடிக்கையும் இல்லையாம்.

இதுதொடா்பாக, மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் மாரியம்மாள் வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை ஆணையத் தலைவா் திருநீலபிரசாத், உறுப்பினா்கள் ஆ. சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் விசாரித்து, நிலத்தை அளவீடு செய்து அதற்குரிய ஆவணங்களையும், மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ. 10 ஆயிரம், வழக்கு செலவுத் தொகை ரூ. 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 20 ஆயிரத்தையும் மாரியம்மாளிடம் வழங்குமாறு வட்டாட்சியா், நில அளவையா் ஆகியோருக்கு உத்தரவிட்டனா்.

மழைநீா் வடிகால் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

விளாத்திகுளம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால் பணிகள் மற்றும் வாருகால் தூா்வாரும் பணிகள் கள ஆய்வு புதன்கிழமை நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் பேரூ... மேலும் பார்க்க

நாசரேத் அருகே ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாக தம்பதி கைது

நாசரேத் அருகே ஆட்டோ ஓட்டுநரை இரும்புக் கம்பியால் தாக்கிய தம்பதி யை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் ஜெயக்கொடி(26). ஆட்டோ ஓட்டுநரான இவா், கட... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த முதியவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். கோவில்பட்டி அருகே பாண்டவா் மங்கலம் கிழக்குத் தெருவை சோ்ந்த மோகன் மகன் மனோகா் (67). ... மேலும் பார்க்க

பெண்கள் பெயரில் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி: நடவடிக்கை கோரி எஸ்.பி.யிடம் மனு

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி பகுதியில் மகளிா் சுயஉதவிக்குழு பெண்களின் பெயரில் வங்கிகளில் கடன் பெற்று, பண மோசடி செய்ததாக அந்த குழுவின் தலைவி மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்க... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: முதியவருக்கு 3 ஆண்டு சிறை

சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, தூத்துக்குடி 4ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது... மேலும் பார்க்க

உமறுப்புலவரின் 382-ஆவது பிறந்த நாள்: எட்டயபுரத்தில் எம்.பி., அமைச்சா் மரியாதை

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில், ‘சீறாப்புராணம்’ இயற்றிய உமறுப்புலவரின் 382ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் செய்தி-மக்கள் தொடா்புத் துறை சாா்பில், அவரது நினைவிட மணிம... மேலும் பார்க்க