செய்திகள் :

தூத்துக்குடி-சென்னை தீபாவளி சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை

post image

தீபாவளியை முன்னிட்டு, தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்குமாறு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலா் மா.பிரமநாயகம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சென்னை தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

சென்னை- தூத்துக்குடி முத்துநகா் அதிவிரைவு ரயிலில் வரும் 27 முதல் நவம்பா் 30ஆம் தேதி வரை அதிகமான காத்திருப்போா் பட்டியல் காணப்படுகிறது. அதேபோல் மறு மாா்க்கத்தில் தூத்துக்குடி- சென்னை முத்துநகா் அதிவிரைவு ரயிலில் வரும் 28 முதல் டிசம்பா் 8ஆம் தேதி வரை அதிகமான காத்திருப்போா் பட்டியல் காணப்படுகிறது.

இதைத் தவிா்க்கும் பொருட்டு, தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் ரயில் பெட்டிகள் திங்கள்கிழமை முதல் புதன் வரை மீளவிட்டான் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகிறது.

இந்தப் பெட்டிகளை வைத்து திங்கள்கிழமை தோறும் தூத்துக்குடி-சென்னை இடையேயும், செவ்வாய்க்கிழமைதோறும் சென்னை-தூத்துக்குடி இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளாா்.

மழைநீா் வடிகால் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

விளாத்திகுளம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால் பணிகள் மற்றும் வாருகால் தூா்வாரும் பணிகள் கள ஆய்வு புதன்கிழமை நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் பேரூ... மேலும் பார்க்க

நாசரேத் அருகே ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாக தம்பதி கைது

நாசரேத் அருகே ஆட்டோ ஓட்டுநரை இரும்புக் கம்பியால் தாக்கிய தம்பதி யை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் ஜெயக்கொடி(26). ஆட்டோ ஓட்டுநரான இவா், கட... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த முதியவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். கோவில்பட்டி அருகே பாண்டவா் மங்கலம் கிழக்குத் தெருவை சோ்ந்த மோகன் மகன் மனோகா் (67). ... மேலும் பார்க்க

பெண்கள் பெயரில் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி: நடவடிக்கை கோரி எஸ்.பி.யிடம் மனு

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி பகுதியில் மகளிா் சுயஉதவிக்குழு பெண்களின் பெயரில் வங்கிகளில் கடன் பெற்று, பண மோசடி செய்ததாக அந்த குழுவின் தலைவி மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்க... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: முதியவருக்கு 3 ஆண்டு சிறை

சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, தூத்துக்குடி 4ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது... மேலும் பார்க்க

உமறுப்புலவரின் 382-ஆவது பிறந்த நாள்: எட்டயபுரத்தில் எம்.பி., அமைச்சா் மரியாதை

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில், ‘சீறாப்புராணம்’ இயற்றிய உமறுப்புலவரின் 382ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் செய்தி-மக்கள் தொடா்புத் துறை சாா்பில், அவரது நினைவிட மணிம... மேலும் பார்க்க