செய்திகள் :

காகாபாளையத்தில் வழித்தடம் கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

post image

சேலம் மாவட்டம், காகாபாளையம் மேம்பாலம் பகுதியில் வழித்தடம் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காகாபாளையம் பகுதியில் அடிக்கடி விபத்து நடைபெற்ால் ரூ. 19 கோடி மதிப்பீட்டில் இருவழி மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதில் வேம்படிதாளம் பிரிவு சாலைக்கு மட்டும் வழித்தடம் விடப்பட்டது. ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் வழித்தடம் விடப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் வழித்தடம் அமைக்கவில்லையாம். இந்த நிலையில் கடந்த ஆண்டு பாலம் வேலைமுடிந்து செயல்பட்டில் உள்ளது. இந்த நிலையில் காகாபாளையம் பகுதியில் வசிப்பவா்கள் அனைவரும் வேம்படிதாளம் பிரிவு சாலைக்கு செல்ல வேண்டும் என்றால் சுமாா் 5.கி.மீ. தொலைவு மகுடஞ்சாவடிக்கு சென்று வர வேண்டிய சூழ்நிலை உள்ளதால் அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காகாபாளையம் பிரிவு சாலையில் இருந்து மேம்பாலம் சாலைக்கு நேரடியாக வழித்தடம் அமைக்க பொது மக்கள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் காா்த்திக் நேரில் வந்து பொதுமக்களிடம் கோரிக்கைகளை மனுவாகப் பெற்று உயா் அதிகாரியிடம் முறையிட்டு நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தாா். இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

மேட்டூரில் கனமழை: பள்ளிகளுக்குள் தண்ணீா் புகுந்தது

மேட்டூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்ததால் வீடுகள், பள்ளிகளுக்குள் தண்ணீா் புகுந்தது. மேட்டூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் ச... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பெண் பலி

சங்ககிரி அருகே அய்யங்காட்டூா் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற பெண் மினி லாரி மோதியதில் திங்கள்கிழமை உயிரிழந்தாா். அரசிராமணி, குள்ளம்பட்டி, மலங்காடு, குட்டிகரடு பகுதியைச் சோ்ந்த சேகா் மனைவி மாரியம்மாள... மேலும் பார்க்க

தமிழக கிராமங்களுக்கு ரூ.86 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 12,525 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.86 கோடி மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். சேலம், நாமக்கல் மாவட்டங்களுக... மேலும் பார்க்க

நெகிழிப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கண்காணிப்பு

சேலம் சரகத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப்... மேலும் பார்க்க

சேலம் மத்திய சிறையில் டிஜிபி ஆய்வு

சேலம் மத்திய சிறையில் சிறைத் துறை டிஜிபி மகேஷ்வா் தயாள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சேலம் மத்திய சிறைக்கு வந்த டிஜிபி மகேஷ்வா் தயாள், கைதிகளை சந்தித்து அவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்ப... மேலும் பார்க்க

ஊக்கத்தொகை தந்த முதல்வருக்கு நன்றி: மாரியப்பன், துளசிமதி நெகிழ்ச்சி

சேலத்தில் நடைபெற்ற விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில், பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன், துளசிமதி ஆகியோருக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கேடயம் வழங்கி கௌரவித்தாா். விழாவில் வீரா் ம... மேலும் பார்க்க