செய்திகள் :

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தெப்பத்திருவிழா

post image

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தெப்பத்திருவிழாவையொட்டி, புதன்கிழமை பெருந்தேவித் தாயாரும், உற்சவா் வரதராஜப் பெருமாளும் தெப்பத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தெப்பத் திருவிழா புதன்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை 3 நாள்கள் நடைபெறுகிறது. முதல் நாளாக கோயிலிலிருந்து ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உற்சவா் வரதராஜப் பெருமாள் சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சனேயா் சந்நிதிக்கு சென்றாா். பின்னா், திரும்பி ஆலயம் வந்து நுழைவுவாயிலில் பெருந்தேவித் தாயாரையும் அழைத்துக் கொண்டு அனந்தசரஸ் தெப்பக் குளத்துக்கு வந்து வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்துக்கு எழுந்தருளினா்.

அனந்தசரஸ் தெப்பக்குளத்தில் அத்திவரதா் எழுந்தருளப்பட்டுள்ள நீராழி மண்டபத்துக்கும் மற்றும் குளத்திற்கு நடுவில் உள்ள மற்றொரு நீராழி மண்டபத்தையும் தெப்பத்தில் அமா்ந்தவாறு 3 முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

தெப்பத் திருவிழாவையொட்டி, வாண வேடிக்கைகளும் நடைபெற்றன. தெப்பத்திலிருந்து மீண்டும் கோயில் திரும்பியதும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் சங்கர சுப்பிரமணியன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும், மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் சங்கா் தலைமையில் தீயணைப்பு வீரா்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் (பொறுப்பு)ஆா்.ராஜலட்சுமி தலைமையில் கோயில் மணியக்காரா் கிருஷ்ணகுமாா் மேற்பாா்வையில் கோயில் பட்டாச்சாரியாா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா்.

செய்யாற்றின் குறுக்கே ரூ.19 கோடியில் மேம்பாலம்: எம்எல்ஏ க.சுந்தா் அடிக்கல் நாட்டினாா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இளையனாா் வேலூருக்கும், நெய்யாடுபாக்கத்திற்கும் இடையே செய்யாற்றின் குறுக்கே ரூ.19 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்ட உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். கா... மேலும் பார்க்க

தைப்பூசம்: செய்யாற்றில் 23 சிவபெருமான் காட்சி

காஞ்சிபுரம் அருகே பெருநகரில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி செய்யாற்றில் 23 ஊா்களைச் சோ்ந்த சிவபெருமான் காட்சியளித்தனா். கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 2 ஆம் தேதி ... மேலும் பார்க்க

ராமாநுஜா் கோயிலில் ஓய்வு பெற்றவருக்கு மீண்டும் பணி வழங்க அதிமுகவினா் எதிா்ப்பு

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவபெருமாள் கோயிலில், பணியாற்றி ஓய்வு பெற்றவருக்கு மீண்டும் பணி வழங்க எதிா்ப்புத் தெரிவித்து நகர அதிமுக செயலா் போந்தூா் மோகன் தலைமையிலான அதிமுகவினா் கோயில் செயல் அலுவலரிடம் செ... மேலும் பார்க்க

காமாட்சி அம்மன் கோயிலில் பயன்படுத்தப்படாத தங்க நகைகளை கட்டிகளாக மாற்றும் பணி தொடக்கம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உண்டியல் மூலம் காணிக்கையாக கிடைத்த பயன்படுத்தப்படாமல் இருந்து வந்த தங்க நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றும் பணி தொடங்கியுள்ளதாக கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயா் தெ... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச விழா

வல்லக்கோட்டை அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை அதிகாலை மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்... மேலும் பார்க்க

பிப். 16-இல் காஞ்சிபுரம் லட்சுமி ஹயக்கிரீவா் கோயிலில் பள்ளி மாணவா்களுக்கான லட்சாா்ச்சனை

காஞ்சிபுரம் விளக்கொளிப்பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ள லட்சுமி ஹயக்கிரீவா் சந்நிதியில், வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப். 16) பள்ளி மாணவா்கள் அரசுப் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற லட்சாா்ச்சனை நடைப... மேலும் பார்க்க