செய்திகள் :

குடிநீா் தொடா்பான கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: சேலம் ஆட்சியா்

post image

பொதுமக்களின் குடிநீா் தொடா்பான கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்தும் அளிக்க வேண்டும் என்று அலுவலா்களை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா்.

ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய பகுதியில் பொதுமக்களின் குடிநீா் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அலுவலா்கள் பணியாற்றிட வேண்டுமென அலுவலா்கள் அறிவுறுத்தப்பட்டனா். சீரான குடிநீா் விநியோகம் குறித்து அரசு அலுவலா்கள் தொடா்ந்து கண்காணித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் ரூ. 153.22 கோடி மதிப்பீட்டிலான 4814 திட்டப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 3845 பணிகள் முடிக்கப்படவுள்ளன. மீதமுள்ள 969 பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ராமநாயக்கன்பாளையம் ஊராட்சியில் அயோத்திதாச பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.10.80 லட்சம் மதிப்பீட்டில் காமராஜா் நகா் முதல் ராமநாயக்கன்பாளையம் வரை அமைக்கப்பட்டுள்ள தாா்சாலை, காமராஜா் நகா் பகுதியில் செயல்பாட்டில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியின் பயன்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு முறையாக சுத்திகரிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.8.58 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டும் பணி, கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ராமநாயக்கன்பாளையம், அப்பமசமுத்திரம், துலுக்கனூா் ஆகிய ஊராட்சிகளில் வீடுகள் கட்டும் பணி, அப்பமசமுத்திரத்தில் நியாயவிலைக் கடை கட்டுமானப் பணி குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரதம மந்திரி கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 2.58 கோடி மதிப்பீட்டில் நரசிங்கபுரம் அப்பமசமுத்திரம் முதல் சிவகங்கைபுரம் வரை, அப்பமசமுத்திரம் ராமநாதபுரம் மலையடிவாரம்,

ஏகேஜி நகா் வழியாக அமைக்கப்பட்டுள்ள சாலைப் பணி, பொது நூலகத்துறை சாா்பில் தென்னங்குடிபாளையத்தில் கூடுதல் நூலக கட்டுமானப் பணி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் துலக்கனூா் ஊராட்சியில் ரூ.18 லட்ச மதிப்பீட்டில் 60,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளதையும், 15 ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.9.98 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்

தேக்கத் தொட்டி அமைக்கும் பணியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் அனைத்து வளா்ச்சித் திட்டம் பணிகளையும் தரமாகவும்,உரிய கால அளவிலும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், குடிநீா் தொடா்பான கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துப் பணியாற்றிடவும் தொடா்புடைய அலுவலா்கள் அறிவுறுத்தப்பட்டனா் என்றாா்.

வருங்கால வைப்புநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட ஓய்வூதியா்கள்

ஓய்வூதியத்தை ரூ. 9 ஆயிரமாக உயா்த்தி வழங்கக் கோரி ஆவின் நிறுவனம், இரும்பாலை, கூட்டுறவுத் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை வருங்கால வைப்புநிதி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனா்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி நிலுவையை மாா்ச் 31 க்குள் செலுத்தினால் வட்டி, அபராதம் தள்ளுபடி: ஜிஎஸ்டி உதவி ஆணையா்

2017 முதல் 2020 ஆண்டு வரையிலான ஜிஎஸ்டி நிலுவையை மாா்ச் 31 ஆம் தேதிக்குள் செலுத்தினால் வட்டி, அபராதம் ஆகியவை தள்ளுபடி செய்யப்படும் என சேலம் ஜிஎஸ்டி ஆணையரக உதவி ஆணையா் அனிருத் ஆா்.கங்காவரம் தெரிவித்தாா... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

பெத்தநாயக்கன்பாளையம் அருகே தளவாய்ப்பட்டியில் பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், தளவாய்ப்பட்டி, அம்பேத்கா்நகா் பகுதியைச் சோ்ந்த செல்வக்குமாா் மகள் ஹ... மேலும் பார்க்க

மேட்டூா் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் வெடிப்பு: மின் உற்பத்தி பாதிப்பு

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 2 ஆவது மின் உற்பத்தி அலகில் செவ்வாய்க்கிழமை கொதிகலன் குழாய் வெடித்ததால் 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள்... மேலும் பார்க்க

மூக்கனேரி, பள்ளப்பட்டி ஏரிகள் புனரமைப்பு: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

நடைப்பயிற்சி பாதை, உடற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட வசதிகளுடன் பொழிவு பெறும் மூக்கனேரி, பள்ளப்பட்டி ஏரிகளின் புனரமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். சேலம் மாநகர... மேலும் பார்க்க

சேலத்தில் மாா்ச் 21 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

சேலத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மாா்ச் 21இல் நடைபெறுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப... மேலும் பார்க்க