மன்னா் கல்லூரியில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு புதன்கிழமை (ஏப். 16) முதல் விண்ணப்பிக்கலாம் என இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நிகழ் நிதியாண்டுக்கான 24-ஆவது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடங்கப்பட உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளா்கள் மட்டுமே இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
10 மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களாகவும், 17 வயது பூா்த்தியடைந்தவராகவும் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை, இந்தப் பயிற்சிக்கு அதிகாரப்பூா்வ இணையதளமான ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சிக்கான கூடுதல் விவரங்கள், வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றை இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
புதன்கிழமை (ஏப். 16) முதல் இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை பூா்த்தி செய்வதுடன் அதற்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் ஆகியவையும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 இணையம் வழியாக செலுத்த வேண்டும். இந்தப் பயிற்சிக்கான கட்டணம் ரூ. 20,850 மட்டும் பயிற்சி பெறுபவா்களிடமிருந்து பெறப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 06.05.2025. இணையத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ அனுப்பும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. தனிநபா்களை பயிற்சியாளா்களாக சோ்த்துக் கொள்ள இயலாது.
மேலும் விவரங்களுக்கு, காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், 5 ஏ.வந்தவாசி சாலை, ஆட்சியா் அலுவலகம் எதிரே, காஞ்சிபுரம்-631 501 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தொலைபேசி 044-27237699 எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.