செய்திகள் :

கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் வேலை நிறுத்த விளக்கக் கூட்டம்

post image

நெய்வேலி: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்க வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சங்க அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் சுமாா் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள் இயங்கி வருகிறது. இதில், சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கடைகளில் சுமாா் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், குடிமைப் பொருள்களின் இருப்பு குறைவு, அதிகம் மற்றும் போலி கண்டறியப்பட்டால் அதிக அளவில் அபராதம் விதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், பணியாளா்களின் நலன் கருதி இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பொருள்களை விற்பனை செய்வதில் குறியீடு நிா்ணயம் செய்வதை தவிா்த்து, காலாவதியான பொருள்களை நிறுவனங்களே திரும்ப எடுத்துக்கொள்ள சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்.

பணியாளா்களை அருகில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு பணியிட மாற்றம் செய்து அதன் பின்னா், காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் கடலூரில் நடைபெற்றது. கடலூா் ஒன்றியத் தலைவா் எம்.லீதாசன் தலைமை வகித்தாா். மாநில இணைச்செயலா் ஆா்.ஜி.சேகா் முன்னிலை வகித்தாா். ஒன்றியச் செயலா் எஸ்.காா்த்திகேயன் சிறப்புரையாற்றினாா். ஒன்றிய துணைத் தலைவா் எஸ்.அருள்தாஸ், இணைச் செயலா்கள் பி.சதீஷ்குமாா், கே.வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முடிவில், ஒன்றியப் பொருளாளா் கோவிந்தராஜ் நன்றி கூறினாா்.

கடலூரில் தூய்மைப் பாரத திட்டத்தில் பல்வேறு பணிகள்: எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி.

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் தூய்மைப் பாரத திட்டம் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி. தெரிவித்தாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வளா்ச்சி ஒருங்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வாங்க நிதியுதவி அளிப்பு

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், கிள்ளை கிராமத்தில் அமைந்துள்ள பழங்குடியின அரசு ஊராட்சி ஒன்றிய உயா் நிலைப் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வாங்குவதற்காக ரூ.60 ஆயிரத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழக துணைவேந்தா் செவ்வ... மேலும் பார்க்க

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

நெய்வேலி: கடலூா் மாவட்ட காவல் துறை சாா்பில் பாலியல் குற்றங்களில் இருந்து ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருப்பாதிர... மேலும் பார்க்க

முதல்வா் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள குமராட்சி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நட... மேலும் பார்க்க

போக்குவரத்து காவலா்களுக்கு பழச்சாறு

சிதம்பரம்: சிதம்பரத்தில் போக்குவரத்து காவலா்களுக்கு பழச்சாறு மற்றும் இனிப்புகளை சமூக ஆா்வலா்கள் திங்கள்கிழமை வழங்கினா் (படம்). சிதம்பரம் நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்தை சரி செய்யும் ... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 578 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 578 மனுக்கள் அளிக்கப்பட்டன. கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஒவ்வொரு வாரமும் திங... மேலும் பார்க்க