செய்திகள் :

சத்தீஸ்கரில் 3 நக்சல்கள் சரண்!

post image

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 3 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

சுக்மா மாவட்டத்தில் இன்று (மார்ச் 18) மட்காம் எர்ரா பாபு (வயது 26), சோடி தேவா (35) மற்றும் மட்காம் ஹத்மா (41) ஆகிய மூன்று நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது சரணடைந்த பாபு என்பவர் சேத்னா நாட்யா மண்டுலி எனும் மாவோயிஸ்டு அமைப்பின் தலைவராகவும், ஹாத்மா என்பவர் தண்டாகார்ன்யா ஆதிவாசி கிசான் மஜ்தூர் சங்காதான் எனும் அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:பொதுத்துறை நிறுவனத்திடம் மர்ம கும்பல் மோசடி! ஒரு எழுத்தால் ரூ. 54 லட்சம் இழப்பு!

மேலும், அவர்கள் இருவர் மீதும் பாதுகாப்புப் படையினர் தலா ரூ.2 லட்சம் சன்மானம் அறிவித்து தேடி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, மூன்றாவது நபரான தேவா என்பவர் மற்றொரு மாவோயிஸ்டு அமைப்பின் துணைத் தலைவராக செயல்பட்டு வந்துள்ளார்.

இதுகுறித்து, அம்மாநில காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், சரணடைந்த மூவரும் மாநில அரசின் நக்சல் எதிர்ப்பு கொள்கைகளை பாராட்டி ஆதரித்ததாகவும் அவர்களது மறுவாழ்விற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமேசுவரம் மீனவா்கள் புதன்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப... மேலும் பார்க்க

மீண்டும் உயர்ந்த தங்கம்: இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.66 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையில் ஆபரணத் தங்கத்திந் விலை கடந்த மார்ச் 14 ஆம் தேதி ரூ.66,400-க்கு விற்பனையாகி புதிய உச்சத்... மேலும் பார்க்க

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: இபிஎஸ் வாழ்த்து

சவால்களை எதிர்கொண்டு பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி தேரோட்டம்!

மதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனிப் பெருவிழாவையொட்டி, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ... மேலும் பார்க்க

அணையில் படகு கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 7 பேர் மாயம்!

மத்தியப் பிரதேசத்தின் ஷிவப்புரி மாவட்டத்திலுள்ள அணையில் படகு கவிழ்ந்ததில் 4 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் மாயமாகியுள்ளனர். மாட்டாடிலா அணைப்பகுதியிலுள்ள தீவில் அமைந்துள்ள சித்தா பாபா கோயிலுக்கு இன்று (ம... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்கு முன் சிறுமியை கட்டாயத் திருமணம் செய்தவர் கைது!

புது தில்லியில் கடந்த 2013 ஆம் ஆண்டு சிறுமியை கட்டாயத் திருமணம் செய்தவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தில்லியின் புறநகர் பகுதியைச் சேர்ந்தவர் அனில் (வயது 38), இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு 13 வயது ச... மேலும் பார்க்க