செய்திகள் :

சலூன் கடைக்காரரிடம் உரையாடும் ராகுலின் விடியோ வைரல்!

post image

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஒரு சலூன் கடையில் சவரம் செய்யும்போது கடைக்காரரான அஜித்துடன் உரையாடல் குறித்த விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விடியோவில் ``நாள் முழுவதும் உழைத்தாலும், நாளின் இறுதியில் சேமிக்கக்கூடிய வகையில் எதுவும் மிஞ்சவில்லை’’ என்று ராகுலிடம் அஜித் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

ராகுல் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது, ``அஜித் கூறிய `எதுவும் மிச்சமில்லை’ என்ற நான்கு வார்த்தைகளும், அவரது நம்பிக்கைகளும் இந்தியாவில் உழைக்கும் ஒவ்வொரு ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் நிலையை எடுத்துரைக்கின்றன.

முடிதிருத்துபவர்கள் முதல் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள், குயவர்கள், தச்சர்கள் வரையிலான தொழிலாளர்களின் கடை, வீடு மற்றும் சுயமரியாதையை, இந்தியாவின் வீழ்ச்சியடைந்த வருமானம் மற்றும் பணவீக்க அதிகரிப்புதான் கொள்ளையடித்துள்ளன.

தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்கும் மற்றும் குடும்பங்களுக்கு சேமிப்பை மீண்டும் கொண்டு வரும் புதிய திட்டங்களும் நவீன தீர்வுகளும்தான் இன்று தேவை’’ என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க:திராவிடநல் திருநாடு என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா?

அஸ்ஸாமில் அரசுத் தேர்வால் இணைய சேவை முடக்கம்!

அஸ்ஸாமில் நடைபெறவுள்ள அரசுத் தேர்வையொட்டி, அக். 27 ஆம் தேதியில் மாநிலம் முழுவதும் இணையச் சேவை முடுக்கப்படுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.அஸ்ஸாமில் வரும் ஞாயிற்றுக்கிழமையில் (அக். 27) 28 மா... மேலும் பார்க்க

காங்கிரஸ் - பாஜக மோதலில் பாஜக தொண்டர் பலி!

அஸ்ஸாமில் காங்கிரஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையிலான மோதலில் பாஜக தொண்டர் பலியானார்.அஸ்ஸாமில் சமாகுரி சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தலுக்காக, வியாழக்கிழமையில் (அக். 24) காங்கிரஸ் வேட்பாளர் தன்சில்... மேலும் பார்க்க

மும்பையில் ரூ. 138 கோடி நகைகள் பறிமுதல்! போலீஸார் விசாரணை!

மகாராஷ்டிரத்தில் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில், ரூ. 138 கோடியிலான தங்க நகைகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.மகாராஷ்டிரத்தில் நவம்பர் மாதத்தில் சட்ட... மேலும் பார்க்க

சுற்றுலா சென்ற புதுமணப் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!

மத்தியப் பிரதேசத்தில் சுற்றுலா புதுமணத் தம்பதியரைத் தாக்கி, பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில், புதிதாய் திருமணமான தம்ப... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் அப்போதாபாத்தில் புதிய பயங்கரவாத தொழிற்சாலை; தகவல்கள்

புது தில்லி: பாகிஸ்தானின் அப்போதாபாத்தில், மத்திய அரசால் பயங்கரவாத அமைப்புகள் என தடை செய்யப்பட்டிருக்கும் லஸ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல்முஜாகிதீன், ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய அமைப்புகள் கூட்டாக பயங்கரவாத முகாமை ... மேலும் பார்க்க

குற்றவாளிகள் பெரிய ஆள்கள் என்பதால்.. சுஷாந்த் ராஜ்புத் வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்

மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்தவர்களிடம் காட்டம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், குற்றவாளிகள் மிகப்பெரிய ஆள்கள் என்பதால்தானே என்று குறிப்பிட்டுள்ளது.மேலும், சுஷாந்த் சிங் ராஜ... மேலும் பார்க்க