குட் பேட் அக்லி: தென்னிந்திய வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது யார்?
பாகிஸ்தானின் அப்போதாபாத்தில் புதிய பயங்கரவாத தொழிற்சாலை; தகவல்கள்
புது தில்லி: பாகிஸ்தானின் அப்போதாபாத்தில், மத்திய அரசால் பயங்கரவாத அமைப்புகள் என தடை செய்யப்பட்டிருக்கும் லஸ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல்முஜாகிதீன், ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய அமைப்புகள் கூட்டாக பயங்கரவாத முகாமை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டுப் பயிற்சி ஆலை இயங்கி வரும் இடமானது, பாகிஸ்தான் நாட்டின் ராணுவத்துக்குச் சொந்தமான வளாகம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முகாம்கள் குறித்து தகவல்கள் கூறுவது என்னவென்றால், பயங்கரவாத கூட்டுப் பயிற்சி முகாம் இயங்கி வருவது மிகவும் பாதுகாப்பான இடம். அதற்கு அருகிலேயே பாகிஸ்தான் ராணுவ முகாம் உள்ளது. ராணுவத்தினரைத் தாண்டித்தான் பயங்கரவாத முகாமுக்குள் யாரும் நுழைய முடியும் என்கிறது அந்த தகவல்.