செய்திகள் :

தொடர் மழையால் செந்நிறமாக மாறிய காவிரி!

post image

பென்னாகரம்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் காவிரியில் வரும் நீர் செந்நிறமாக மாறியுள்ளது.

கர்நாடகா மாநில நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதேபோல் தமிழக நீர்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாற்றபாளையம், கேரட்டி, கெம்பாகரை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது.

இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா நீரோடையில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும், கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஒகேனக்கலுக்கு வரும் நீர் வரத்தானது கடந்த சில நாள்களாக தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது.

காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தானது வியாழக்கிழமை மாலை நிலவரப்படி 33,000 கன அடியாக இருந்தது. பின்னர் இரு மாநில நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பெய்து வந்த மழையின் அளவு சற்று குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 35,000 கன அடியாக அதிகரித்த நீர் வரத்து, பிற்பகல் 2 மணி நிலவரப்படி, விநாடிக்கு 32,000 கன அடியாக குறைந்து தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது.

கடந்த சில நாள்களாக நீர் வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கலில் உள்ள பிரதான அருவி, சினி, ஐந்தருவி, ஐவார் பாணி உள்ளிட்ட அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து, சில இடங்களில் புதிதாக அருவிகள் தோன்றியுள்ளன.

காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள தொடர் நீர் வரத்தின் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி அருவிகளில் குளிப்பதற்கும், ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் விதிக்கப்பட்டிருந்தத் தடை 13-வது நாளாக நீடிக்கிறது.

இரு மாநில நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதாலும், காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீரென அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வரும் நிலையில் ஒகேனக்கலுக்கு வரும் நீர் வரத்தின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கலுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவேரி ஆற்றில் வரும் நீரானது செந்நிறமாக மாறியுள்ளது.

இதையும் படிக்க: பிஞ்சுக் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் சுவாசத் தொற்று! தீர்வு என்ன?

சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு:

காவிரி ஆற்றின் மற்றொரு கிளை ஆறான சின்னாறு உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சின்னாற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான பென்னாகரம், கோவில் பள்ளம், கினிகட்டு ஓடை, கோடுப் பட்டி, தாசம்பட்டி, பாலக்கோடு, மாரண்டஹள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சின்னாற்றில் நிகழாண்டில் 2 ஆவது முறையாக மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மிஸ்டர் மனைவி தொடரில் மாற்றப்பட்ட பிரபல நடிகை!

மிஸ்டர் மனைவி தொடரில் இருந்து நடிகை ஸ்மிருதி விலகியுள்ளார்.சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 10.30 மணிக்கு மிஸ்டர் மனைவி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. வேலைக்குச் சென்று சுதந்திரமாக... மேலும் பார்க்க

பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார்.பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் விதம் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்துள... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் பகுதியில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கைது செய்யப்பட்டுள்ளார்.அதிமுக முன்னாள் அம... மேலும் பார்க்க

நவ. 7-ல் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் நவ. 7 ஆம் தேதி விடுமுறை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்!

சாலை விபத்தில் உயிரிழந்த வீரவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் ரூ.25 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ச... மேலும் பார்க்க

அரசுப்பேருந்து நடத்துநர் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்!

பணியின்போது உயிரிழந்த அரசுப்பேருந்து நடத்துநரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவியை அறிவித்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பு:சென்னை ... மேலும் பார்க்க