செய்திகள் :

Aadhar: `ஆதார் அடையாள சான்று மட்டும்தான்...' - உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?!

post image
``ஆதார் அட்டை 'அடையாள சான்று' மட்டுமே... வயதை சொல்லும் ஆவணம் இல்லை" என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு ஒன்றில் கூறியுள்ளது.

2015-ம் ஆண்டு, ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோதக்கைச் சேர்ந்த சிலாக் ராம் என்பவர் இன்னொருவரை அழைத்துக்கொண்டு பைக்கில் சென்றுள்ளார். ஆனால், அப்போது விபத்து ஏற்பட்டு சிலாக் ராம் உயிரிழந்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?!

சிலாக் ராம் மரணத்திற்கு இழப்பீடு கேட்டு, மோட்டர் வாகன விபத்துகள் இழப்பீடு தீர்ப்பாயத்தில் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். தீர்ப்பாயம் அவரது பள்ளி சான்றிதழின் படி, அவரது வயது 45 என்று கணக்கிட்டு, ரூ.19.35 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால், காப்பீட்டு நிறுவனமோ, சிலாக் ராமின் ஆதார் அட்டை படி, அவரது வயது 47 என்றும், அவருக்கு இழப்பீட்டு தொகை ரூ.9.22 லட்சம் தான் என்றும் கூறியது.

இதை எதிர்த்து சிலாக் ராமின் குடும்பம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கரோல், உஜ்ஜால் பூயான், "சிறார் நீதி சட்டம், 2005-ன் படி, பள்ளி டி.சியை தான் வயது கணக்கிட எடுத்துக்கொள்ள வேண்டும். ஆதார் என்பது அடையாள சான்று மட்டுமே...வயதை குறிக்கும் ஆவணம் அல்ல. வயது குறித்து தெரிந்துகொள்ள பள்ளி சான்றிதழ்களை பார்க்கலாம்" என்று தீர்ப்பளித்தனர்.

திருவாரூர்: "பஸ் ஸ்டாப் இருந்தும் பஸ் நிற்காது..." - அரசுக் கல்லூரி மாணவர்கள் வேதனை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, தண்டலைச்சேரி பகுதியில், திருத்துறைப்பூண்டி - திருவாரூர் பிரதான சாலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி தொடக்கத்தில் பாரதி... மேலும் பார்க்க

Vijay TVK: `அரசியல் கட்சிகளும் அதன் முதல் மாநாடும்' - ஒரு விரிவான பார்வை

இந்திய மாநிலங்கள் முழுவதும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தி வந்தது. தேசிய கட்சிகளே மத்தியிலும், மாநிலத்திலும் ஆதிக்கம் செலுத்தின. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கதையே வேறு. தமிழ்நாடு... மேலும் பார்க்க

ஈரோடு: ரக ரகமாக துப்பாக்கிகள்; ஆர்வத்துடன் பார்வையிட்ட மாணவர்கள் - காவல்துறை கண்காட்சி Photo Album

துப்பாக்கி கண்காட்சிதுப்பாக்கி கண்காட்சிதுப்பாக்கி கண்காட்சிதுப்பாக்கி கண்காட்சிதுப்பாக்கி கண்காட்சிதுப்பாக்கி கண்காட்சிதுப்பாக்கி கண்காட்சிதுப்பாக்கி கண்காட்சிதுப்பாக்கி கண்காட்சிதுப்பாக்கி கண்காட்சி... மேலும் பார்க்க

``112 நாடுகளில் ஆய்வு; இந்தியாவில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகம்..'' -ஐ.நா அறிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முன்முயற்சி (OPHI) இணைந்து ஒரு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டன. அதில், உளகளவில் 112 நாடுகளில் சுமார் 100 கோடிக்கும... மேலும் பார்க்க

`தீபாவளி' ரெய்டு: அதிகாரிகள் காட்டில் பணமழை; விடாமல் துரத்தும் விஜிலென்ஸ் - ஒரே நாளில் இவ்வளவா?!

தீபாவளி நெருங்கியதையொட்டி, தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸார் அதிரடியாக ரெய்டு நடத்தி வருகின்றனர்.அதிகாரிகள், அரசு அலுவலகங்களில் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் பெறுவதை தடுக்கும் நோக்கத்தி... மேலும் பார்க்க