செய்திகள் :

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் பகுதியில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களை உறுப்பினருமான சி.வி. சண்முகம், தனக்கு செல்லிடப்பேசி, சமூக ஊடகங்கள் வாயிலாக எனக்கு கொலை மிரட்டல், அச்சுறுத்தல் வருவதாகவும், மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு காவல் நிலையத்தில் 21 புகார்கள் அளித்தும் திமுக அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விசிக மதுஒழிப்பு மாநாட்டில் தான் பங்கேற்க உள்ளதாக போலியான தகவலை சமூக வலைத்தளங்களில் பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்து ஒரு மாதமாகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இந்த நிலையில், இது குறித்து கேட்பதற்கா விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு முன்னாள் அமைச்சர் சண்முகம் வெள்ளிக்கிழமை வந்தார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியில் சென்று இருப்பதாக காவல்துறையினர் கூறினர்.

இதையும் படிக்க |சாலை விபத்தில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்!

தான் வருவதாக தெரிந்தும் வேண்டுமென்றே வெளியே சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தன்னை சந்திக்கும் வரை தான் இந்த போராட்டத்தில் ஈடுபடுவதாகக்கூறி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் பகுதியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும், நான் கொடுத்த புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என குற்றம்சாட்டியவர், வழக்குரைஞர், முன்னாள் அமைச்சர், தற்போது மாநிலங்களவை உறுப்பினரான எனக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களுக்கு என்ன நிலை? என கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில், தர்னா போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் கேட்டுகொண்டபோதும், தர்னா போராட்டத்தை கைவிட மறுத்ததால் சி.வி.சண்முகத்தை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் வைத்துள்ளனர்.

இதனால் விழுப்புரத்தில் அதிமுகவினர் பெருமளவில் திரண்டதால் பரபரப்பு நிலவியது.

தொடர் மழையால் செந்நிறமாக மாறிய காவிரி!

பென்னாகரம்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் காவிரியில் வரும் நீர் செந்நிறமாக மாறியுள்ளது.கர்நாடகா ம... மேலும் பார்க்க

பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார்.பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் விதம் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்துள... மேலும் பார்க்க

நவ. 7-ல் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் நவ. 7 ஆம் தேதி விடுமுறை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்!

சாலை விபத்தில் உயிரிழந்த வீரவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் ரூ.25 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ச... மேலும் பார்க்க

அரசுப்பேருந்து நடத்துநர் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்!

பணியின்போது உயிரிழந்த அரசுப்பேருந்து நடத்துநரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவியை அறிவித்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பு:சென்னை ... மேலும் பார்க்க

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தர்னா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் பகுதியில் முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் வெள்ளிக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ... மேலும் பார்க்க