செய்திகள் :

மிஸ்டர் மனைவி தொடரில் மாற்றப்பட்ட பிரபல நடிகை!

post image

மிஸ்டர் மனைவி தொடரில் இருந்து நடிகை ஸ்மிருதி விலகியுள்ளார்.

சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 10.30 மணிக்கு மிஸ்டர் மனைவி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

வேலைக்குச் சென்று சுதந்திரமாக வாழ வேண்டும் என நினைக்கும் பெண்ணுக்கும், வீட்டில் சமையல் செய்து குடும்பத்தை பார்த்துகொள்ள வேண்டும் என நினைக்கும் ஆணுக்கும் இடையிலான திருமண வாழ்க்கையே மிஸ்டர் மனைவி தொடரின் மையக்கரு.

இந்த நிலையில், மிஸ்டர் மனைவி தொடரில் கவிமலர் பாத்திரத்தில் நடித்துவந்த ஸ்மிருதி காஷ்யப், இத்தொடரில் இருந்து விலகியுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க: நடிகரை கன்னத்தில் அறைந்த பெண்..! வைரலாகும் விடியோ!

ரோஜா தொடரில் பூஜா பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், மிஸ்டர் மனைவி தொடரில் பிரதான பாத்திரத்தில் நடித்துவந்த இவர், இத்தொடரில் இருந்து விலகியுள்ள செய்தி, அவரது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை அளித்துள்ளது.

முன்னதாக, நடிகை ஷாபான மிஸ்டர் மனைவி தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதில் அஞ்சலி பாத்திரத்தில் நடிகை தேப்ஜானி மொடாக் நடித்து வருகிறார்.

தற்போது, ஸ்மிருதி காஷ்யப் நடித்துவந்த கவிமலர் பாத்திரத்தில் சின்னத்திரை நடிகை கீர்த்தி நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

திராவிடநல் திருநாடு என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா?

திராவிடநல் திருநாடு என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.வனத்துறை அமைச்சர் க. பொன்முடியின் “திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்” நூல் வெளியீட்டு ... மேலும் பார்க்க

மதுரையில் 15 நிமிடத்தில் 45 மி.மீ மழை: சு. வெங்கடேசன்

மதுரையில் 15 நிமிடத்தில் 45 மி.மீ மழை பெய்துள்ளதாக மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது:மதுரையில... மேலும் பார்க்க

திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிவு... 35 மாணவர்கள் மயக்கம்!

திருவொற்றியூர் தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயு கசிவால் சுமார் 35-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.வடசென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ... மேலும் பார்க்க

தொடர் மழையால் செந்நிறமாக மாறிய காவிரி!

பென்னாகரம்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் காவிரியில் வரும் நீர் செந்நிறமாக மாறியுள்ளது.கர்நாடகா ம... மேலும் பார்க்க

பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார்.பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் விதம் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்துள... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் பகுதியில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கைது செய்யப்பட்டுள்ளார்.அதிமுக முன்னாள் அம... மேலும் பார்க்க