செய்திகள் :

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நாளை கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

post image

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நாளை(அக்.27) பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகர போக்குரவத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 27-10-24 அன்று சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி சென்னை கடற்கரை யார்ட்டில் நடைபெற உள்ளதால், காலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்-செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, சென்னை பூங்கா ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்-செங்கல்பட்டிற்கு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் காய்ச்சல் வந்து விட்டதால் உளறுகிறார்: அமைச்சர் ராஜேந்திரன்

எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மாநகர போக்குவரத்து கழகம் 27-10-24 அன்று சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கூடுதலாக 6 பேருந்துகளை மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்க உள்ளது.

27-10-24 அன்று கடற்கரை ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், எழும்பூர் மற்றும் பூங்கா ரயில் நிலைய பேருந்து நிறுத்தங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'நீங்கள் எங்களுடன் இருந்தால்...' - தூய்மைப் பணியாளர்களிடையே உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

எவ்வளவு பெரிய மழை வந்தாலும் சென்னை மக்களை காப்பாற்ற எங்களுடன் நீங்கள் இருக்க வேண்டும் என தூய்மை பணியாளர்களிடையே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளி வளாகத... மேலும் பார்க்க

5 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்... மேலும் பார்க்க

திருவொற்றியூர் பள்ளியில் வாயுக்கசிவு: 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்கம்!

திருவொற்றியூர் பள்ளியில் வாயுக்கசிவால் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மயக்கமடைந்துள்ளனர். திருவொற்றியூர் விக்டரி மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வகத்தில் கடந்த இரு நாள்களாக வாயுக்கசிவு இருந்துள்ளது. மாணவிகள... மேலும் பார்க்க

சென்னை ரிசர்வ் வங்கியில் பெண் காவலரின் துப்பாக்கி சுட்டதால் பரபரப்பு!

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் பெண் காவலரின் துப்பாக்கி தானாக சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை ராஜாஜி சாலையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியில் இன்று(சனிக்கிழமை) அதிகாலை திடீரென ஆபத்து அலாரம்ஒ... மேலும் பார்க்க

புதிய உச்சத்தில் தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 58,000-ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்ட நிலையில், தொடர்ந்து விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.அதன்பட... மேலும் பார்க்க

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே நாளை (அக். 27) மின்சார ரயில்கள் ரத்து!

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே நாளை (அக். 27) மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூற... மேலும் பார்க்க