செய்திகள் :

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே நாளை (அக். 27) மின்சார ரயில்கள் ரத்து!

post image

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே நாளை (அக். 27) மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை கடற்கரை பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் நாளை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை ரத்து செய்யப்படுகிறது.

பயணிகளின் வசதிக்காக சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து காலை 5 மணி முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டுக்கு 23 சிறப்பு ரயில்கள் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

அதே போல, சென்னை பூங்காவில் இருந்து 14 சிறப்பு ரயில்கள் தாம்பரத்திற்கு இயக்கப்படும்.

இதே போல, செங்கல்பட்டில் இருந்து காலை 4 மணியில் இருந்து 30 நிமிட இடைவெளியில் பூங்கா ரயில் நிலையத்திற்கு 25 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

தாம்பரத்தில் இருந்து காலை 3.55 மணியில் இருந்து 30 நிமிட இடைவெளியில் சென்னை பூங்கா ரயில் நிலையத்திற்கு 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ரிசர்வ் வங்கியில் பெண் காவலரின் துப்பாக்கி சுட்டதால் பரபரப்பு!

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் பெண் காவலரின் துப்பாக்கி தானாக சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை ராஜாஜி சாலையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியில் இன்று(சனிக்கிழமை) அதிகாலை திடீரென ஆபத்து அலாரம்ஒ... மேலும் பார்க்க

புதிய உச்சத்தில் தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 58,000-ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்ட நிலையில், தொடர்ந்து விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.அதன்பட... மேலும் பார்க்க

தேனியில் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

தேனி மாவட்டத்தில் பரவலாக வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுமுள்ளது. இதையும் படிக்க: தொடா் மழை: சேறும் சகதியுமாக மாறிய கம்பம் போக்குவரத்து பணிமனைஇதையடுத்... மேலும் பார்க்க

மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: ராமதாஸ்

மத்திய அரசைக் காரணம் காட்டாமல், மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஆல்க... மேலும் பார்க்க

அரசுத் திட்ட கள ஆய்வு: கோவையில் தொடங்குகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

கோவையில் நவம்பா் 5 மற்றும் 6 ஆகிய நாள்களில் அரசு நலத் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்யவுள்ளாா். இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அண்மையில் நாமக்கல் மாவட்டத்துக்கு அரசு ம... மேலும் பார்க்க

மகாராஷ்டிர தோ்தல் பிரசாரம்: 20 நாள்களில் 12 கூட்டங்களில் பங்கேற்கிறாா் பிரதமா் மோடி

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாக சுமாா் 20 நாள்களில் 12 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பிரதமா் நரேந்திர மோடி தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறாா். ந... மேலும் பார்க்க