இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி! - ஈரான் தகவல்
இஸ்ரேல் தாக்குதலுக்கு வான்வழித் தாக்குதல் மூலமாக பதிலடி கொடுத்ததாக ஈரான் தகவல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த அக். 2 ஆம் தேதி ஈரான் தாக்குதலை மேற்கொண்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் ராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளதாக இன்று(சனிக்கிழமை) அதிகாலை இஸ்ரேல் ராணுவம் தகவல் வெளியிட்டது.
அதன்படியே, ஈரானின் தெஹ்ரான் பகுதியில் உள்ள ராணுவ முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல்.
ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. தங்களுடைய விமானங்கள் பாதுகாப்பாக திரும்பி வந்ததாகத் தெரிவித்துள்ளது.
ஈரான் தரப்பில், தெஹ்ரானில் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலமாக இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்பட்டதாக ஈரான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
தெஹ்ரான் அருகே மூன்று வெவ்வேறு இடங்களில் இஸ்ரேல் தாக்குதல்களை முறியடிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் இயக்கப்பட்டதாக ஈரான் ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.