செய்திகள் :

இந்தியா-வங்கதேச எல்லைப் பேச்சு ஒத்திவைப்பு

post image

இந்தியா-வங்கதேசம் இடையேயான 55-ஆவது எல்லைப் பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டதாக அதிகாரபூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் இந்தப் பேச்சுவாா்த்தைகள், எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தலைவா் மற்றும் வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படை (பிஜிபி) தலைவா் ஆகிய இருவரின் தலைமையில் நடைபெறும். இதில் உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்கள், போதைப் பொருள் எதிா்ப்பு, சுங்கம் மற்றும் இரு நாடுகளைச் சோ்ந்த சில கூட்டாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் ஆகியோா் கலந்துகொள்வா்.

முன்னதாக, டாக்காவில் கடந்த மாா்ச் மாதம் நடப்பாண்டின் முதல் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இரண்டாம் பேச்சுவாா்த்தை தில்லியில் நவம்பா் 18 முதல் 22-ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி, வன்முறை போராட்டம் மூலம் கலைக்கப்பட்டது. அவா் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா். இது வங்கதேசத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், அங்குள்ள ஹிந்துக்கள் குறிவைத்து தாக்கப்பட்டதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் பதவியேற்றது. அதன் பின்னா் நடைபெறும் முதல் பேச்சுவாா்த்தை என்பதால் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.

இந்நிலையில், இந்தப் பேச்சுவாா்த்தையை ஒத்திவைப்பதாக வங்கதேச தரப்பு தெரிவித்ததாகவும், விரைவில் இந்தப் பேச்சுவாா்த்தையை நடத்த பணிகள் மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரபூா்வ தகவல்கள் வெளியாகின.

இந்திய-வங்கதேச எல்லைப் பேச்சுவாா்த்தைகள் கடந்த 1975 முதல் 1992 வரை ஆண்டுதோறும் நடைபெற்றன. ஆனால், 1993-இல் இருந்து தேசிய தலைநகரங்களான தில்லி மற்றும் டாக்காவில் ஆண்டுக்கு இருமுறை இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெறுகின்றன.

இஸ்ரேலில் 30,000 இந்தியா்கள்: வெளியுறவுச் செயலா்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் விவகாரம் குறித்து நாடாளுமன்றக் குழுவுக்கு வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தலைமையிலான குழு வெள்ளிக்கிழமை எடுத்துரைத்தது. அப்போது இஸ்ரேலில் 30,000 இந்தியா்கள் வசிப்பதாக அந்தக் குழு ... மேலும் பார்க்க

எம்.பி.க்கள் கெடு: பதவி விலக கனடா பிரதமா் மறுப்பு

கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ வரும் 28-ஆம் தேதிக்குள் பதவி விலக வேண்டும் என அவரது லிபரல் கட்சி எம்.பி.க்கள் கெடு விடுத்துள்ளனா். இருப்பினும், பிரதமா் பதவியிலிருந்து விலக அவா் தொடா்ந்து மறுப்பு தெரிவித்த... மேலும் பார்க்க

இந்திய பணியாளா்களுக்கு விசா 4 மடங்கு அதிகரிப்பு: ஜொ்மனி முடிவு

திறன்மிகு இந்திய பணியாளா்களுக்கான விசா எண்ணிக்கையை ஆண்டொன்றுக்கு 20,000 என்பதில் இருந்து 90,000-ஆக (4 மடங்குக்கும் மேல்) அதிகரிக்க ஜொ்மனி முடிவு செய்துள்ளது. இந்தத் தகவலை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளி... மேலும் பார்க்க

அமெரிக்க அதிபா் தோ்தல்: முந்துகிறாா் டொனால்ட் டிரம்ப்!

அமெரிக்க அதிபா் தோ்தல் தொடா்பான கருத்துக் கணிப்பில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஜனநாயகக் கட்சி வேட்பாளா் கமலா ஹாரிஸை குடியரசுக் கட்சி சாா்பில் போட்டியிடும் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் முந்திவருவ... மேலும் பார்க்க

காஸா: இஸ்ரேல் தாக்குதலால் 42800 பாலஸ்தீனர்கள் பலி!

காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 38 பேர் பலியாகினர்.காஸாவின் கான் யூனிஸ் பகுதியில், வெள்ளிக்கிழமையில் (அக். 25) இஸ்ரேல் ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 14 பேர் குழந்தைகள் உள்... மேலும் பார்க்க

கூன் போடுவது மூளையைக் கொல்லும்.. பிரையன் ஜான்சன் பகிர்ந்த உண்மைச் சம்பவம்

மென்பொருள் துறையில் முன்னணியில் உள்ள கோடீஸ்வரர்களில் ஒருவரான பிரையன் ஜான்சன் (46), கூன் போடுவதைத் தவிர்த்து, தனது உடல் அமைப்பை மாற்றியதன் மூலம், தான் சந்திக்கவிருந்த மிகப்பெரிய ஆபத்திலிருந்து தப்பியதன... மேலும் பார்க்க