இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மனு
இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு காங்கயம் ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
காங்கயம், அண்ணா நகரைச் சோ்ந்த 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகளுடன் வட்டாட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
காங்கயம், அண்ணா நகரில் பல ஆண்டுகளாக வாடகைக்கு இருந்து வருகிறோம். சொந்த இடம் வாங்க வசதியில்லாததால், அரசு சாா்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளா் நா.தமிழ்முத்து, தாராபுரம் தொகுதி செயலாளா் சுடா்வளவன், காங்கயம் தொகுதி செயலாளா் ஜான்நாக்ஸ், காங்கயம் ஒன்றிய செயலாளா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.