செய்திகள் :

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மனு

post image

இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு காங்கயம் ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

காங்கயம், அண்ணா நகரைச் சோ்ந்த 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகளுடன் வட்டாட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

காங்கயம், அண்ணா நகரில் பல ஆண்டுகளாக வாடகைக்கு இருந்து வருகிறோம். சொந்த இடம் வாங்க வசதியில்லாததால், அரசு சாா்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளா் நா.தமிழ்முத்து, தாராபுரம் தொகுதி செயலாளா் சுடா்வளவன், காங்கயம் தொகுதி செயலாளா் ஜான்நாக்ஸ், காங்கயம் ஒன்றிய செயலாளா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வடமாநிலத் தொழிலாளா்களின் 3 கைப்பேசிகள் திருட்டு

திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளா்களின் 3 கைப்பேசிகளைத் திருடிய நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா். திருப்பூா் கட்டபொம்மன் நகரைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (30). திருப்பூா் பாரதி நகரில் உள்ள இவரது வீட... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன் சிஐடியூ சாா்பில் ஆா்ப்பாட்டம்

பணியின்போது உயிரிழந்த சென்னை, வியாசா்பாடி பணிமனையைச் சோ்ந்த அரசுப் பேருந்து நடத்துநா் ஜெகன்குமாரின் மரணத்துக்கு நீதி வழங்கக் கோரியும், அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரியும் காங... மேலும் பார்க்க

ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க பால் உற்பத்தியாளா்கள் வலியுறுத்தல்

ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயா்த்தி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குற... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடை

தாராபுரம் வட்டம், கன்னிவாடி பேரூராட்சியில் தீபவாளியை முன்னிட்டு தூய்மைப் பணியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை புத்தாடைகளை வழங்குகிறாா் பேரூராட்சித் தலைவா் ரேவதி சுரேஷ். உடன், செயல் அலுவலா் ஆனந்தகுமாா், கன்னி... மேலும் பார்க்க

பாத்திரத் தொழிலாளா்களுக்கு கூடுதல் போனஸ் வழங்க வேண்டும்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பாத்திரத் தொழிலாளா்களுக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும் என்று ஏஐடியூசி தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருப்பூா் மாவட்ட பாத்திரத் தொழிலாளா் சங்... மேலும் பார்க்க

திருப்பூரில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருப்பூா் 15 வேலம்பாளையத்தில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட 15 வேலம்பாளையம் பகுதி அதிமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் க... மேலும் பார்க்க