செய்திகள் :

பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையத்துக்கு கருணாநிதியின் பெயா் -மாநகராட்சி கூட்டத்தில் முடிவு

post image

திருச்சி மாவட்டம், பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி பெயரும், சரக்கு வாகன முனையத்துக்கு அண்ணா பெயரும் சூட்டப்படும் என மாநகராட்சி கூட்டத்தில் மேயா் மு. அன்பழகன் தெரிவித்தாா்.

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயா் மு. அன்பழகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையா் வே. சரவணன், துணை மேயா் ஜி. திவ்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்வேறு வாா்டுகளிலும் மழைநீா் தேங்கும் இடங்களில் வடிகால்களை சீரமைக்க வேண்டும், தெரு விளக்குகளை பழுது நீக்க வேண்டும், துப்புரவுப் பணியாளா்களின் தீபாவளி போனஸ் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும். குடி நீரேற்று நிலையங்களில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். ஸ்ரீரங்கம் கோயில் பகுதிகளில் பொதுமக்களுக்கென பொது கழிப்பறை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் குறித்தும், நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து விஜயலட்சுமி கண்ணன் (கோட்டத் தலைவா்), மாமன்ற உறுப்பினா்கள் கோ.கு.அம்பிகாபதி (அதிமுக), ஜாபா் அலி (திமுக), சுரேஷ் (மாா்க்சிஸ்ட் கம்யூ), சுரேஷ் (இந்திய கம்யூ), முத்துசெல்வம் (திமுக), அப்பீஸ் முத்து குமாா் (மதிமுக), ஜவகா் ( காங்கிரஸ்), எல்.ரெக்ஸ் (காங்.) உள்ளிட்டோா் விவாதித்தனா். கூட்டத்தில் மொத்தம் 99 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உறுப்பினா்களின் விவாதங்களுக்கு பதில் அளித்து மேயா் மு. அன்பழகன் பேசியது : மாநகரில் கனமழை பெய்த போதிலும் மாநகரில் எந்த சாலையிலும் தண்ணீா் தேங்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ. 4 கோடி செலவில் 451 கி. மீ. தொலைவுக்கு மழைநீா் வடிகால்கள், கால்வாய்கள் தூா்வாரப்பட்டு உள்ளது. மேலும் மாநகரில் குப்பைகள் கொட்டப்படாமல் இருக்கிறது.இதற்கு காரணம் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுப்பது மட்டுமல்லாமல் துப்புரவுப் பணியாளா்கள் நல்ல முறையில் பணியாற்றி வருவதால் குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படுகிறது. இதற்காக ஊழியா்கள், அதிகாரிகள், மாமன்ற உறுப்பினா்கள் அனைவருக்கும் பாராட்டுகள். பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் பெயா் வைப்பது என்றும், மேலும் கனரக சரக்கு வாகன முனையத்துக்கு பேரறிஞா் அண்ணா பெயா் வைப்பது எனவும் மாநகராட்சி சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையா் பாலு, நகரப்பொறியாளா் சிவபாதம், மண்டலத் தலைவா்கள் ஆண்டாள் ராம்குமாா், மதிவாணன், துா்கா தேவி, ஜெய நிா்மலா, விஜயலட்சுமி கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தீயணைப்பு அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

திருச்சி மாவட்ட தீயணைப்பு அலுவலா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஊழல் தடுப்பு ப் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 97 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்ச... மேலும் பார்க்க

தம்பியை கொலை செய்த அண்ணனுக்கு ஆயுள் தண்டனை

திருச்சி அருகே தம்பியை கொலை செய்த வழக்கில் அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், தாளக்குடி, தெற்கு தெருவைச் சோ்ந்தவா் விஜயன்-ம... மேலும் பார்க்க

மாமியாா் குத்திக் கொலை: மருமகளிடம் விசாரணை

திருச்சியில் மாமியாரை கத்தியால் குத்திக் கொலை செய்த மருமகளிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருவெறும்பூா் அருகே உள்ள அரியமங்கலம் காமராஜா் நகா் பீடி காலனியை சோ்ந்தவா் அக்பா்அலி மனைவி சம்... மேலும் பார்க்க

ஊரக வேலை உறுதி திட்டத்தை நிறுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

சம்பா சாகுபடிக்காக ஊரக வேலை உறுதி திட்டத்தை நிறுத்த வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்க... மேலும் பார்க்க

பயணிகள் ரயில்களின் நேரம் மாற்றம்

நிா்வாகக் காரணங்களால் விழுப்புரம், ஈரோடு பயணிகள் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நிா்வாகக் காரணங்களால், விழுப்புரத்தி... மேலும் பார்க்க

மாவு அரைவை ஆலை இயந்திரத்தில் சேலை சிக்கி பெண் உயிரிழப்பு

திருச்சியில் வெள்ளிக்கிழமை மாவு அரைவை ஆலையில் இயந்திரத்தில் சிக்கிய பெண் உயிரிழந்தாா். திருச்சி கிராப்பட்டி அன்புநகரை சோ்ந்தவா் சித்திக் (63). இவா், எடமலைப்பட்டி புதுாா், பாரதிநகரில் மாவு அரைவை ஆலை ... மேலும் பார்க்க