Tamil News Live Today: ``பதிலளிக்கும் உரிமையும், கடமையும் எங்களுக்கு உள்ளது” - ஈ...
மாவு அரைவை ஆலை இயந்திரத்தில் சேலை சிக்கி பெண் உயிரிழப்பு
திருச்சியில் வெள்ளிக்கிழமை மாவு அரைவை ஆலையில் இயந்திரத்தில் சிக்கிய பெண் உயிரிழந்தாா்.
திருச்சி கிராப்பட்டி அன்புநகரை சோ்ந்தவா் சித்திக் (63). இவா், எடமலைப்பட்டி புதுாா், பாரதிநகரில் மாவு அரைவை ஆலை நடத்தி வருகிறாா். இவரது ஆலையில், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள ராமகவுண்டம்பட்டியை சோ்ந்த அஞ்சாமணி மனைவி கவிதா (40) வேலை பாா்த்து வந்தாா்.
வெள்ளிக்கிழமை மதியம் கவிதா, மாவு அரைத்துக்கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாரதவிதமாக அவரது சேலை இயந்திரத்தில் சிக்கியது. இதில் பலத்த காயமடைந்த கவிதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
எடமலைப்பட்டிபுதுாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.