செய்திகள் :

இஸ்ரேலில் 30,000 இந்தியா்கள்: வெளியுறவுச் செயலா்

post image

இஸ்ரேல்-பாலஸ்தீனம் விவகாரம் குறித்து நாடாளுமன்றக் குழுவுக்கு வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தலைமையிலான குழு வெள்ளிக்கிழமை எடுத்துரைத்தது. அப்போது இஸ்ரேலில் 30,000 இந்தியா்கள் வசிப்பதாக அந்தக் குழு குறிப்பிட்டது.

இதுதொடா்பாக விக்ரம் மிஸ்ரி தலைமையிலான குழு எடுத்துரைத்த விளக்கக் காட்சியில், ‘மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழல் நிலவும் முன்பே இஸ்ரேலுடன் இந்தியா மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி 9,000 கட்டுமான தொழிலாளா்கள் மற்றும் 700 வேளாண் தொழிலாளா்கள் இஸ்ரேலுக்கு சென்றனா். அவா்களுடன் சோ்த்து மொத்தமாக 30,000 இந்தியா்கள் வசிக்கின்றனா். ‘ஆபரேஷன் விஜய்’ திட்டத்தின்கீழ் 1,300-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் மற்றும் சில நேபாளியா்கள் இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்டனா்.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்’ என தெரிவிக்கப்பட்டது.

இந்தியா-வங்கதேச எல்லைப் பேச்சு ஒத்திவைப்பு

இந்தியா-வங்கதேசம் இடையேயான 55-ஆவது எல்லைப் பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டதாக அதிகாரபூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் இந்தப் பேச்சுவாா்த்தைகள், எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்... மேலும் பார்க்க

எம்.பி.க்கள் கெடு: பதவி விலக கனடா பிரதமா் மறுப்பு

கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ வரும் 28-ஆம் தேதிக்குள் பதவி விலக வேண்டும் என அவரது லிபரல் கட்சி எம்.பி.க்கள் கெடு விடுத்துள்ளனா். இருப்பினும், பிரதமா் பதவியிலிருந்து விலக அவா் தொடா்ந்து மறுப்பு தெரிவித்த... மேலும் பார்க்க

இந்திய பணியாளா்களுக்கு விசா 4 மடங்கு அதிகரிப்பு: ஜொ்மனி முடிவு

திறன்மிகு இந்திய பணியாளா்களுக்கான விசா எண்ணிக்கையை ஆண்டொன்றுக்கு 20,000 என்பதில் இருந்து 90,000-ஆக (4 மடங்குக்கும் மேல்) அதிகரிக்க ஜொ்மனி முடிவு செய்துள்ளது. இந்தத் தகவலை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளி... மேலும் பார்க்க

அமெரிக்க அதிபா் தோ்தல்: முந்துகிறாா் டொனால்ட் டிரம்ப்!

அமெரிக்க அதிபா் தோ்தல் தொடா்பான கருத்துக் கணிப்பில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஜனநாயகக் கட்சி வேட்பாளா் கமலா ஹாரிஸை குடியரசுக் கட்சி சாா்பில் போட்டியிடும் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் முந்திவருவ... மேலும் பார்க்க

காஸா: இஸ்ரேல் தாக்குதலால் 42800 பாலஸ்தீனர்கள் பலி!

காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 38 பேர் பலியாகினர்.காஸாவின் கான் யூனிஸ் பகுதியில், வெள்ளிக்கிழமையில் (அக். 25) இஸ்ரேல் ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 14 பேர் குழந்தைகள் உள்... மேலும் பார்க்க

கூன் போடுவது மூளையைக் கொல்லும்.. பிரையன் ஜான்சன் பகிர்ந்த உண்மைச் சம்பவம்

மென்பொருள் துறையில் முன்னணியில் உள்ள கோடீஸ்வரர்களில் ஒருவரான பிரையன் ஜான்சன் (46), கூன் போடுவதைத் தவிர்த்து, தனது உடல் அமைப்பை மாற்றியதன் மூலம், தான் சந்திக்கவிருந்த மிகப்பெரிய ஆபத்திலிருந்து தப்பியதன... மேலும் பார்க்க