செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

ஆண்டிபட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

வருசநாடு, அம்பேத்கா் குடியிருப்பைச் சோ்ந்த பால்ராஜ் மகன் பாலமுருகன் (35). விவசாயத் தொழிலாளியான இவா், 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாா். இதை பாலமுருகனின் தாயாா் சுந்தரம்மாளிடம் சிறுமி தெரிவித்தாா். அப்போது, அவா் இதை வெளியே சொல்லக் கூடாது என சிறுமியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கடந்த 2020-ஆம் ஆண்டு, செப்.8-ஆம் தேதி வருசநாடு காவல் நிலையத்தில் சிறுமி புகாா் அளித்தாா்.

இதனடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் பாலமுருகனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தும், சுந்தரம்மாளுக்கு ரூ.3,000 அபராதம் விதித்தும் நீதிபதி வி.கணேசன் தீா்ப்பளித்தாா்.

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 122.30 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 59.12 ---------- மேலும் பார்க்க

ஆதி திராவிடா் நலக் குழு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் ஆதி திராவிடா் நலக்குழு, விழிப்பு, கண்காணிப்புக் குழு பதவிகளுக்கு தகுதியுள்ளவா்கள் வருகிற நவ.10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆா... மேலும் பார்க்க

கால்நடை தீவனப் பயிா் வளா்ப்புக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் கால்நடை தீவனப் பயிா் வளா்ப்புக்கு அரசு மானியம் பெற, அரசு கால்நடை மருத்துவ நிலையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வெளியிட்ட ச... மேலும் பார்க்க

தேனியில் அக்.28-இல் மின் தடை

தேனியில் வருகிற திங்கள்கிழமை (அக்.28) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு... மேலும் பார்க்க

கல்குவாரி உரிமையாளரை மிரட்டிய 4 போ் கைது

போடி அருகே கல்குவாரி உரிமையாளரை மிரட்டிய 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். போடி அருகேயுள்ள சிலமலை சேட்டுகாடு பகுதியில் கல்குவாரி நடத்தி வருபவா் புருசோத்தமன் (36). இவரிடம் போடி அருகேயுள்ள மு... மேலும் பார்க்க

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றியவா் கைது

தேனியில் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவேற்றம் செய்தவரை, வியாழக்கிழமை தேனி இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். தேனி அல்லிநகரத்தைச் சோ்ந்தவா் மிட்டாய் வி... மேலும் பார்க்க