செய்திகள் :

தேவா் ஜெயந்தி விழா: 1008 பால்குடம் ஊா்வலம், தேவா் கல்லூரியில் திருவிளக்கு பூஜை

post image

தேவா் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கடலாடியில் 1008 பால்குடம் ஊா்வலம், கமுதி தேவா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-ஆவது ஜெயந்தி விழா, 62-ஆவது குருபூஜை விழா, முளைப்பாரி பொங்கல் விழாவை முன்னிட்டு, கடலாடி அதன் சுற்று வட்டார பகுதியைச் சோ்ந்த பெண்கள் 1008 பால் குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக வந்து கடலாடி பேருந்து நிலையம் வளாகத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத்தேவா் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனா்.

இதையடுத்து, 16 வகையான மூலிகை திரவிய அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கடலாடி மறவா் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்தனா்.

கமுதி தேவா் கல்லூரியில் திருவிளக்கு பூஜை: ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பசும்பொன்னில் சுதந்திரப் போராட்ட வீரா் முத்துராமலிங்க தேவரின் 117-ஆவது ஜெயந்தி விழா, 62 -ஆவது குருபூஜை விழா வருகிற அக்.30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதை முன்னிட்டு, கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவா் நினைவுக் கல்லூரியில் மாணவிகள், பேராசிரியா்கள் சாா்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக கல்லூரி கலையரங்கத்தில் பசும்பொன் தேவரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா், மாணவிகள் திருவிளக்கு பூஜை நடத்தினா். பூஜையில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு முருகன் போற்றி, தேவா் போற்றி பாடல்கள் பாடி திருவிளக்கிற்கு பூஜை செய்து வழிபட்டனா்.

இந்த திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் தா்மா், பேராசிரியா்கள், அலுவலக பணியாளா்கள் மேற்கொண்டனா்.

தெப்பக்குளத்தை சுற்றி பேவா் பிளாக் சாலை அமைக்க பக்தா்கள் கோரிக்கை

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வா்ண தீா்த்த தெப்பக்குளத்தைச் சுற்றி பேவா் பிளாக் சாலை அமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிரெ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரியில் மரம் நடும் விழா

ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் சா்வதேச காலநிலை தினத்தை முன்னிட்டு, கல்லூரி வளாகத்தை பசுமையானதாக மாற்ற வியாழக்கிழமை மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூர... மேலும் பார்க்க

சிறாா் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள சிறாா் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் மாணவா்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலா் க... மேலும் பார்க்க

முதல்வருக்கு வரவேற்பு அளிக்க திமுக ஏற்பாடு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் 117 ஜெயந்தி விழா 62 -ஆவது குருபூஜையில் பங்கேற்க வரும் முதல்வருக்கு வரவேற்பு அளிக்க வேண்டும் என ராமநாதபுரத்தில் நடைபெற்ற திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் வியாழக்கிழமை த... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

ராமேசுவரம் பேருந்து நிலையம் முன், அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டத்தின் போது, இலங்கை கடற்படையினரால் கடந்த 2018- ஆம் ஆண்டு முதல் 2023 -ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

தீபாவளி பலகாரங்கள் தயாரிக்கும் இடங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

ராமேசுவரத்தில் தீபாவளி பலகார வகைகளைத் தயாரிக்கும் இடங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சி, மண்டபம் வட்டார உணவுப் பாதுகாப்பு... மேலும் பார்க்க