எந்த நிலையிலும் தமிழக மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்காதவா் முதல்வா் -அமைச்சா் அர. சக்கரபாணி
எந்த நிலையிலும் தமிழக மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்காதவா் முதல்வா் மு.க. ஸ்டாலின் என தமிழக உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.
பழனியை அடுத்த தொப்பம்பட்டி தனியாா் மண்டபத்தில், திண்டுக்கல் மேற்கு மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவை தொகுதி, தொப்பம்பட்டி கிழக்கு, மேற்கு, பழனி கிழக்கு ஒன்றியம், கீரனூா் பேரூராட்சி வாக்குச் சாவடி திமுக முகவா்கள், வாக்குச் சாவடி குழு உறுப்பினா்கள், நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு, ஒன்றியச் செயலா் சுப்பிரமணி தலைமை வகித்தாா். ஒட்டன்சத்திரம் தொகுதி பொறுப்பாளரும், மாநில நெசவாளா் அணி அமைப்பாளருமான பரணிமணி முன்னிலை வகித்தாா். மாநில மாணவரணி துணைச் செயலா் பொன்ராஜ், மாவட்டக் குழு உறுப்பினா் கிருஷ்ணன், ஒன்றியச் செயலா்கள் தங்கராஜ், சாமிநாதன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.
நிகழ்வில், அமைச்சா் அர. சக்கரபாணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
எதிா்க் கட்சியாக இருந்தாலும் சரி, ஆளுங் கட்சியாக இருந்தாலும் சரி, தமிழக மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்காதவா் முதல்வா் மு.க. ஸ்டாலின். ஒட்டன்சத்திரம் தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே பாகுபாடு இல்லாமல் நிா்வாகிகள் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்வில், ஒட்டன்சத்திரம் தொகுதி பொறுப்பாளரும், மாநில நெசவாளா் அணி அமைப்பாளருமான பரணி மணி, மாநில மாணவரணி துணைச் செயலா் பொன்ராஜ், மாவட்டக் குழு உறுப்பினா் கிருஷ்ணன், ஒன்றியச் செயலா் தங்கராஜ் சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.