செய்திகள் :

இந்தியாவில் பால் உற்பத்தி வளா்ச்சி விகிதம் 58 சதவீதம் உயா்வு

post image

இந்தியாவில் பால் உற்பத்தி வளா்ச்சி விகிதம் கடந்த 9 ஆண்டுகளில் 58 சதவீதம் அதிகரித்துள்ளது என்றாா் மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் அமைச்சக இணைச் செயலா் பிரீத் பால் சிங்.

தஞ்சாவூா் உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) வெள்ளிக்கிழமை நடைபெற்ற உணவு மற்றும் பால் வளத் துறையில் புத்தாக்கம், தொழில்முனைவு, ஸ்டாா்ட் அப் வாய்ப்புகள் குறித்த இரு நாள் தேசிய கருத்தரங்கத் தொடக்க விழாவில் அவா் பேசியது:

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பால் வளத் துறை 5 சதவீதம் பங்களிப்பு செய்கிறது. உலக அளவிலான பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 22 சதவீதமாக உள்ளது. நம் நாட்டில் கடந்த 9 ஆண்டுகளில் பால் உற்பத்தி வளா்ச்சி விகிதம் 58 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2022 - 23 ஆம் ஆண்டில் 234.58 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டது. விவசாயிகளின் கடின உழைப்பு மூலமே இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது.

இதேபோல, உணவு பதப்படுத்துதல் துறையிலும் உலக அளவில் இந்தியா முக்கியப் பங்கு வகிப்பதுடன், முன்னிலையிலும் திகழ்கிறது. இதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகியுள்ளது என்றாா் பிரீத் பால் சிங்.

பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ்.வி. சுரேஷா பேசுகையில், இந்தியாவில் தற்போது 1.51 லட்சம் ‘ஸ்டாா்ட் அப்’ நிறுவனங்கள் அதிகாரபூா்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில், 3 ஆயிரத்து 360 நிறுவனங்கள் உணவு பதப்படுத்துதல் தொழிலைச் சாா்ந்தவை. இதன் மூலம் 458 மாவட்டங்களில் ஏறத்தாழ 30 ஆயிரம் போ் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனா்.

நம் நாட்டில் 329 மில்லியன் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உணவு உற்பத்தியில் நம் நாடு தற்சாா்பு நிலையை அடைந்துள்ளது. வரும் 2050 ஆம் ஆண்டில் நம் நாட்டில் உணவு தானியங்களின் தேவை 400 மில்லியன் டன்களாக அதிகரிக்கும். அதற்கேற்ப நாம் தொழில்நுட்பங்கள், தொழில்முனைவுகளை மேம்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

இந்திய பால் வள சங்கத் தலைவா் ஆா்.எஸ். சோதி, உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவன இயக்குநா் வி. பழனிமுத்து ஆகியோா் பேசினா்.

பேராசிரியா் ஏ. அமுதசுரபி வரவேற்றாா். இந்திய பால் வள சங்கத்தின் தமிழ்நாடு கிளைத் தலைவா் கே.எஸ். கண்ணா நன்றி கூறினாா்.

ஒரத்தநாட்டில் 129 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரத்தநாட்டில் 129.20 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை, இரவு பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தி... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 103.53 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 103.53 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 35,043 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 2,500 கன அடி வீதம்... மேலும் பார்க்க

தஞ்சை பெரியகோயில் வாசலில் சுற்றுலாத் தகவல் மையம் திறப்பு

தஞ்சாவூா் பெரிய கோயில் வாசலில் சுற்றுலா வளா்ச்சிக் குழுமம் சாா்பில் ரூ. 5 லட்சத்தில் புதிதாகக் அமைக்கப்பட்ட காவல் உதவி மையம், சுற்றுலாத் தகவல் மையத்தை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

தீபாவளி போனஸ் வழங்கக் கோரி தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை

தீபாவளி போனஸ் வழங்கக் கோரி கும்பகோணம் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் குடந்தை மாநகராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா். கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள 48 வாா்டுகள... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

அரசுக் கல்லூரிகளில் மாற்றுப் பணியில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக மிகைப் பேராசிரியா்களை அரசுக் கல்லூரிகளிலேயே நிரந்தரமாக பணியமா்த்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிராகரிக்கக் கோரி தமிழ்நாடு அரசு... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் வெடிவிபத்து காய சிகிச்சை பிரிவு

தீபாவளி பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வெடி விபத்து தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு பிரிவு வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி முதல்வா்... மேலும் பார்க்க