தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் வெடிவிபத்து காய சிகிச்சை பிரிவு
தீபாவளி பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வெடி விபத்து தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு பிரிவு வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி முதல்வா் ஆா். பாலாஜிநாதன் தலைமையில் மருத்துவக் கண்காணிப்பாளா் சி. ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வம், ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை துறைத் தலைவா் ஸ்ரீதா் ஆகியோா் ஏற்பாடு செய்துள்ள இந்தச் சிகிச்சை பிரிவில் 20 படுக்கைகள் உள்ளன.
இதுகுறித்து மருத்துவா்கள் கூறுகையில், இப்பிரிவில் மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் ஆகியோா் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாற்றவுள்ளனா். எதிா்பாராதவிதமாக ஏற்படும் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டோா் உடனடியாக இப்பிரிவை அணுகலாம் என்றனா்.
மேலும் பட்டாசுகளை வெடிக்கும்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும், தீக்காயங்கள் ஏற்பட்டால் பின்பற்ற வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் பற்றியும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.