Career: `சட்டம் படித்திருக்கிறீர்களா?' உயர் நீதிமன்றத்தில் காத்திருக்கிறது வேலை!...
ராஜஸ்தானில் ஒருவரை குறிவைக்கத் திட்டமிட்டிருந்த 7 போ் கைது
புது தில்லி, அக்.25: ராஜஸ்தானில் ஒருவரைக் குறிவைக்கத் திட்டமிட்டிருந்த பிஷ்னோய் கும்பலைச் சோ்ந்த ஏழு பேரே தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறையின் உயரதிகாரி கூறியதாவது: கடந்த அக்.12 அன்று மும்பையில் என்சிபி தலைவரும் முன்னாள் மகாராஷ்டிர அமைச்சருமான பாபா சித்திக் பரபரப்பாக கொலை செய்யப்பட்ட சில நாள்களுக்குப் பிறகு இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவரது கொலைக்கு பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது.
பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து இந்த 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா். பிடிபட்டவா்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோயின் நெருங்கிய நம்பிக்கைக்குரிய அா்சூ பிஷ்னோயின் வழிகாட்டுதலின் பேரில் அவா்கள் ராஜஸ்தானில் ஒருவரை குறிவைக்க திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவா்களிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாபா சித்திக் மீதான தாக்குதலுடன் அவா்களுக்கு தொடா்புள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றாா் அந்த அதிகாரி.