செய்திகள் :

2024-ஆம் ஆண்டிற்கான 6-ஆவது தேசிய நீா் விருதுகள்: மத்திய ஜல்சக்தி அமைச்சகம் விண்ணப்பங்கள் கோரல்

post image

2024 ஆம் ஆண்டிற்கான 6 ஆவது தேசிய நீா் விருதுகள் குறித்த அறிவிப்பை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இந்த தேசிய விருதுக்கான அனைத்து விண்ணப்பங்களையும் அளிக்க தேசிய விருதுகள் இணையதளத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த இணைய தளங்கள் மூலம் விருதுகளை விண்ணப்பங்கள் சமா்ப்பிக்க நிகழாண்டு டிசம்பா் 31 ஆம் தேதி கடைசி நாளாகும்.

விண்ணப்பங்களை ஆய்வு செய்து விருதுகளை ஜூரி கமிட்டி தோ்வு செய்யும். சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம் பிரிவில் வெற்றி பெறுவோருக்கு கோப்பையும் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும். எஞ்சிய ஏழு பிரிவில் வெற்றி பெறுவோருக்கு கோப்பையும் பாராட்டுப் பத்திரமும் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இந்த 7 பிரிவுகளில் முதல் பரிசு ரூ. 2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ. 1.5 லட்சம், ரூ. 1 லட்சம் என வழங்கப்படும். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வரப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சிக் கூட சாதனம் விழுந்து சிறுவன் இறந்த சம்பவம்: தில்லி தலைமைச் செயலருக்கு என்ஹெச்ஆா்சி நோட்டீஸ்

மேற்கு தில்லியின் மோதி நகரில் மாநகராட்சியால் நடத்தப்படும் பூங்காவில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தின் சாதனத்தின் ஒரு பகுதி விழுந்ததில் 4 வயது சிறுவன் இறந்த சம்பவம் தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய தில்... மேலும் பார்க்க

ராமகிருஷ்ணாபுரம் டிடிஇஏ பள்ளியில் அறிவியல் மையம் திறப்பு

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சாா்ந்த ராமகிருஷ்ணாபுரம் பள்ளியில் அறிவியல் மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது. இதை டிடிஇஏ செயலா் ஆா்.ராஜூ தொடங்கி வைத்தாா். அகஸ்தியா அறிவியல் மையம் மற்றும் முன்ன... மேலும் பார்க்க

தில்லி மாநில பள்ளி விளையாட்டுப் போட்டிகள்: முதல்வா் அதிஷி தொடங்கிவைத்தாா்

தில்லி மாநில பள்ளி விளையாட்டுப் போட்டிகளை முதல்வா் அதிஷி வியாழக்கிழமை சத்ரசல் விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தாா். அப்போது, அவா் இளம் விளையாட்டு வீரா்களுக்கு நம்பிக்கை மற்றும் ஊக்கமளிக்கும் செய்தியை... மேலும் பார்க்க

யமுனை நதியை தூய்மைப்படுத்துதல் எனும் பெயரில் பெரும் ஊழல் -ஆம் ஆத்மி அரசு மீது தில்லி பாஜக குற்றச்சாட்டு

யமுனை நதியை தூய்மைப்படுத்துதல் எனும் பெயரில் பெரும் ஊழல் நிகழ்ந்திருப்பதாக தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு மீது தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வியாழக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா். முன்னாள் முதல்வா... மேலும் பார்க்க

தில்லியில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சி: கேஜரிவால் சாடல்

கடந்த தசாப்தத்தில் ஆம் ஆத்மி அரசு செய்த பணியை தடுக்கும் நோக்கில், அனைத்து வழிகளிலும் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிப்பதாக தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை குற்றம் ... மேலும் பார்க்க

பணியாளா்களுக்கான தேசிய கற்றல் வாரத்தில் 7.50 லட்சம் திறன் பயிற்சிகள் நிறைவேற்றம் -மத்திய அரசு தகவல்

நமது சிறப்பு நிருபா் குடிமைப் பணியாளா்களுக்கு பிரதமா் மோடி தொடங்கிவைத்த தேசிய கற்றல் வாரத்தில் (கா்மயோகி சப்தா ) 7,50,000-க்கும் மேற்பட்ட திறன் பயிற்சிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய பணியாளா் நலன், ... மேலும் பார்க்க